districts

பாலர் பூங்காவின் திருவள்ளூர் மாவட்ட மாநாடு

திருவள்ளூர், நவ. 17- பாலர் பூங்காவின் திரு வள்ளூர் மாவட்ட மாநாடு சனிக்கிழமையன்று (நவ.16), தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலையில் நடை பெற்றது. பாலர் பூங்கா வின் திருவள்ளூர்  மாவட்ட முதல் மாநாடு, மாவட்ட கன்வீனர் ஏ. பத்மா தலைமையில் நடை பெற்றது. பாலர் பூங்கா நிர்வாகி ஜனனி வர வேற்றார். மாநாட்டில் எளிய அறிவியல் சோதனை களை அனிதா குமாரி செய்து காட்டினார். கே.எப்சிபா சிறு,  சிறு விளை யாட்டுக்களை சொல்லி கொடுத்தார். க.ஏ.தமிழ்முரசு மந்திரமா, தந்திரமா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பொன்னேரி மாவட்ட கல்வி அலுவலர் அரவிந்தன் குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரை யாற்றினார். பாலர் பூங்கா வின் நிர்வாகி சி.பெரு மாள் வாழ்த்தி பேசினார். மாநில நிர்வாகி கோட்டீஸ்வரி விழாவை நிறைவு செய்து பேசினார். எஸ்.கீர்த்தி வாசன் நன்றி கூறினார்.முன்னதாக மாணவர்கள் பாடல்கள்,  நடனங்கள்,  சொற்பொழிவு, கதைகள் என பன்முக கலை நிகழ்ச்சி கள் நடத்தினர். மாவட்ட குழு தேர்வு பாலர் பூங்காவின் மாவட்ட தலைவராக பாஸ்கரன் (ஆர்.கே. பேட்டை), செயலாளராக ஜனனி (ஊத்துக்கோட்டை), பொருளாளராக அமுதன் (மீஞ்சூர்), ஒருங்கி ணைப்பாளர்களாக ஜெய் கணேஷ், விஜி, தாமு, சின்னா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.