districts

பெயரளவுக்கு ஆரம்ப சுகாதார நிலையம் அவதிப்படும் மலை மக்கள்

கிருஷ்ணகிரி,ஆக.12-

    கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி வட்டத்தில் உள்ள உரிகம் 26 கி.மீ தூரத்தில் மலை மற்றும் வனப்பகுதிக்குள் உள்ளது. இங்கு 320  குடியிருப்புகள் உள்ளது. மேலும், இந்த கிராமத்தை சுற்றி லும் வீரனப்பள்ளி, ஜீவநத்தம், பிலிக்கல், நூருந்து சுவாமி மலை, உடுப ராணி கோட்டையூர் என 10-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன.

    இந்த கிராமங்களுக்கு பேருந்து வசதி கள் இல்லாத நிலையில், உரிகம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு கர்ப்பிணிகள், குழந்தைகள், பெரியவர்கள், வயதானவர்கள் நடந்தே செல்ல வேண்டியுள்ளது.  

    அப்படி சென்றாலும், இருக்கும் ஒரு மருத்துவரும் இரண்டு செவிலியரும் எப்போது வருவார்கள்?  போவார்கள் என்பது யாருக்கும் தெரியாது. மறு புறத்தில், முதலுதவி மற்றும் மருத்துவம் பார்ப்பதற்கு அடிப்படை வசதிகள் கிடையாது. விஷக்கடி மருந்து, ஊசி இல்லை.

    இதனால், அஞ்செட்டி வட்ட மருத்துவ மனைக்கு சென்றாலும் அதே  நிலை தான். இத னால், 50 கிமீ தொலைவில் இருக்கும் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கும் அவல  நிலையே தொடர்கிறது.

     குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தை களை பராமரிக்க உள்ள 3 இன்குபேட்டர்க ளில் 2 பழுதாகி உள்ளது.பெரும்பாலான நேரங்களில் இப்பகுதியில் மின்சார விநி யோகம் மிகக் குறைவாக உள்ளதால் இருக்கும் ஒரு யுபிஎஸ் வேலை செய்வ தில்லை. இதனால் சுற்றுப்புற மலை கிராமங்க ளில் இருந்து தினமும் பிரசவத்திற்கு வரும் பத்துக்கும் மேற்பட்ட கர்ப்பிணி கள் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.  

    எக்ஸ்ரே, ரத்த பரிசோதனை கட்டமைப்பு களும் கிடையாது. எனவே,மலைக் கிராம மக்களின் நலன் கருதி உரிகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்களை நிய மிக்க, மருத்துவமனைக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் அமைத்து கொடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.