திருவள்ளூர், செப் 7- திருப்பதி அருகில் கொத்தடிமை களாக உள்ள இருளர் இன குடும்பங் களை மீட்டெடுக்க வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை வட்டம், எஸ்விஜி புரம் இருளர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த மல்லிகா கணவர் வேலு, சுதா கணவர் முருகேசன், மகள் துர்கா மகன் அசோக் ஆகிய இரண்டு குடும்பங்கள் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், திருப்பதி அருகில் சந்தன கிரியில் உள்ள வெங்கடேஸ்வரா என்கிற நெல் அரவை ஆலையில் (ரைஸ் மில்) பணியாற்றி வருகின்றனர். ரைஸ் மில்லை விட்டு வெளியே போக முடியாத அளவுக்கு கொத்தடிமை களாக நடத்தி வருவதாக கூறப்படு கிறது. இந்த நிலையில், மலைவாழ் மக்கள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் ஆர்.தமிழ் அரசு தொலைபேசிக்கு தொடர்பு கொண்ட மல்லிகா என்பவர், சந்தனகிரி ரைஸ் மில்லில் இரண்டு குடும்பங்கள் சிக்கிக் கொண்டு இருப்பதை தெரி வித்துள்ளார். மருத்துவமனைக்கு கூட வெளி யில் அனுப்ப விடவில்லை. இரவு, பகல் என்று வேலை வாங்கி வருகிறா ர்கள். எனவே, எங்களை இங்கிருந்து மீட்டு சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று கூறியுள்ளார். இதையடுத்து, சங்கத்தின் தலை வர்கள் தமிழ் அரசு, வஜ்ஜிரவேலு, கமலி ஆகியோர் திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் தீபாவை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில், ஆந்திராவில் கொத்தடிமைகளாக வேலை செய்து வரும் இருளர் இன குடும்பங்களை மீட்டெடுத்து வாழ்வாதாரத்தை உருவாக்கி கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். மனுவை பெற்றுக்கொண்ட ஆர்டிஓ, ஆந்திர மாநில அதிகாரிகளை தொடர்பு கொண்டு நடவடிக்கை மேற்கொண் டார். பிறகு, ரைஸ் மில்லில் இருந்து இரண்டு குடும்பங் களையும் ஆந்திர மாநில அதிகாரிகள் உதவியுடன் மீட்டு அருகில் உள்ள சந்தனகிரி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வந்துள்ளார். இந்த தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரைஸ் மில் உரிமை யாளர், அதிகாரிகளை மிரட்டி சுதா-முருகன் தம்பதியின் குழந்தைகள் துர்கா, அசோக் ஆகியோரை கடத்தி சென்றுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து, மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்ட தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத் தலைவர்கள், திரு வள்ளூர் மாவட்ட மீட்பு குழு உடனடி யாக ஆந்திரா செல்ல வேண்டும். அங்கு கொத்தடிமைகளாக உள்ள இரண்டு குடும்பங்களையும் மீட்டு தமிழகத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்த னர்.