districts

img

மின் ஊழியர் மத்திய அமைப்பு ஆர்ப்பாட்டம்

மின்சார வாரியத்தில் உள்ள 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், ஊதிய உயர்வு பேச்சு வார்த்தையை உடனடியாக துவக்க  வேண்டும். அடையாளம் காணப்பட்ட பகுதி நேர ஊழியர்களுக்கு உடனடியாக பணி ஆணை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின் ஊழியர் மத்திய அமைப்பின் சென்னை வடக்கு கிளையின் சார்பில் மணலில் உள்ள 400 துணை மின் நிலைய அலுவலகம் அருகே முன்னாள் மாநிலக் குழு உறுப்பினர் கே.வெங்கடையா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் செயலாளர் இ.சந்திரசேகர். கவுரவ தலைவர் மதன் கோபால், பொருளாளர் சத்தியமூர்த்தி, தண்டையார்பேட்டை கோட்டச் செயலாளர் திருநீர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.