சென்னை, நவ. 21 - சென்னை அரை மாரத்தானின் 6வது பதிப்பு வரும் ஞாயிறன்று (நவ.24) நடைபெறவிருக்கிறது. சென்னை மாநகரில் நடைபெறவிருக்கிற மிக பிரபலமான ஓட்ட நிகழ்வுகளுள் ஒன்றாக புகழ்பெற்றிருக்கும் இதில், 6000-க்கும் அதிகமான மாரத்தான் ஆர்வலர்கள் பங்கேற்க தயாராகி வரு கிறார்கள். அப்போலோ டயர்ஸ்ன் ஆதரவோடு என்இபி ஸ்போர்ட்ஸ் ஏற்பாடு செய்து நடத்தும் இந்நிகழ்வில் அனைத்து வயது பிரிவுகளையும் மற்றும் பல்வேறு பின்புலங்க ளையும் சேர்ந்த ஓட்டப் பந்தய ஆர்வலர்கள் அதிக எண்ணிக்கையில் ஆர்வத்துடன் பங்கேற்க விருக்கின்றனர். பெசன்ட் நகரில் உள்ள ஆல்காட் நினைவு உயர்நிலைப்பள்ளி மைதானத்திலிருந்து ஆரம்பமாகும் இந்த அரை மாரத்தான் நிகழ்வு சென்னையின் அழகான வழித்தடங்கள் வழியே பயணிக்கும். இந்நிகழ்வு, அரை மாரத்தான் (21.1 கி.மீ.), 10 கி.மீ. மற்றும் 5 கி.மீ. ஓட்டங்கள் என 3 பிரிவுகளில் நடத்தப்படுகிறது. அரை மாரத்தான் நிகழ்வு காலை 4:30 மணியளவிலும் 10 கி.மீ. ஓட்டம் காலை 5:45 மணியளவிலும் மற்றும் 5 கி.மீ. ஓட்டம் காலை 7:00 மணியளவிலும் ஆரம்ப மாகும் என்று புலனாய்வுத் துறையின் தலைமை இயக்குநர் பிரதாப் சிங் கூறினார். பெண்களின் ஆரோக்கி யம், பாதுகாப்பு மற்றும் கல்வியை முன்னிலைப் படுத்தி ஊக்குவிக்கும் நோக்கத்தோடு ஓட்டப் பந்தய வீரர்களின் ஒரு குழு இதில் பங்கேற்கிறது என்று என்இபி ஸ்போர்ட்ஸ் நிர்வாக இயக்குநர் நாக ராஜ் அடிகா கூறினார்.