districts

img

100க்கும் மேற்பட்ட ரோபோடிக் உதவியுடன் சென்னையில் புற்றுநோய் அறுவை சிகிச்சை

சென்னை, ஜூன் 25-  சென்னையில் உள்ள கிளெனேகிள்ஸ் ஹெல்த்சிட்டி மருத்துவ மனை கடந்த  ஓராண்டில் 100-க்கும் மேற்பட்ட ரோபோடிக் புற்றுநோய் அறுவை சிகிச்சைகளை செய்து சாதனை படைத்துள்ளது.   இதை கொண்டாடும் விதமாக நடைபெற்ற விழா வில் நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட முக்கிய பிரப லங்கள் கலந்து கொண்ட னர். இதில் மூன்றாம் நிலை கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, இந்தியா விலேயே முதன்முறையாக ஹைபர்தெர்மிக் இன்ட்ரா பெரிட்டோனியல் கீமோ தெரபி உடன் ரோபோடிக் சைட்டோரேடக்டிவ் அறுவை சிகிச்சை செய்து கொண்ட 82 வயது பெண்மணியும் கலந்து கொண்டார்.   அவருக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சை சமீபத்திய நான்காம் தலை முறை ரோபோடிக் உடன் சமீ பத்திய டா வின்சி ஷி சாதனம் மூலம் செய்யப் பட்டது. இது குறித்து நிகழ்ச்சி யில் பேசிய கிளெனேகிள்ஸ் புற்றுநோய் நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் எஸ். ராஜசுந்தரம் இந்த நான்காம் தலைமுறை தொழில்நுட்பத்தின் மூலம், 100க்கும் மேற்பட்ட சிக்கலான மற்றும் வெற்றி கரமான ரோபோடிக் புற்று நோய் அறுவை சிகிச்சை களை துல்லியமாக செய்துள்ளோம் என்றார்.  குறைந்தபட்ச ஊடுரு வல் அணுகுமுறை மூலம் குறைந்த நேரத்தில் அறுவை சிகிச்சை செய்யப் படுவதால் நோயாளிகள் நீண்ட நாட்கள் மருத்துவ மனையில் தங்கி இருக்கா மல் ஒரு சில நாட்களி லேயே டிஸ்சார்ஜ் செய்யப்படு கிறார்கள்.  இந்த அறுவை சிகிச்சை யானது ரத்த இழப்பைக் குறைப்பதோடு பிரச்சினை களின் அபாயத்தையும் வெகுவாக குறைக்கிறது.  கடந்த ஆண்டு அறுவை செய்து கொண்ட நோயாளிகள் யாருக்கும் எந்தவிதமான பின்விளைவுகளும் ஏற்படவில்லை என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர். மேலும் டாக்டர் ராஜ சுந்தரம் கூறுகையில், உணவுக்குழாய், வயிறு, பெருங்குடல், மலக்குடல் மற்றும் பெண்ணோயியல் புற்றுநோய்கள் உட்பட பல்வேறு வகையான புற்றுநோய்களுக்கும் ரோ போடிக் அறுவை சிகிச்சை சிறந்த பலனை அளிக்கிறது என்றார்.