புதுச்சேரி ,ஜூலை 29-
சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.800 வரை உயர்த்திய மோடி அரசு நூறுநாள் வேலை திட்டத்தில் நாள் ஒன்றுக்கான கூலியை நூறு ரூபாய்கூட ஏன் உயர்த்தவில்லை என்று அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் துணைத்தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆ.லாசர் கேள்வி எழுப்பினார்.
புதுச்சேரி மாநிலத்தில் விவாசய தொழி லாளர்களுக்கு 100நாள் வேலையை முழுமையாக அமல்படுத்த வேண்டும்.நாள் ஒன்றுக்கான கூலி ரூ.600 ஆக உயர்த்த வேண்டும். ஆண்டு ஒன்றுக்கு 100நாட்கள் வேலையை 200 நாட்களாக உயர்த்த வேண்டும். தொழி லாளர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி புதுச்சேரி சட்டப் பேரவை முற்றுகையிடும் போராட்டம் சனிக்கிழமை (ஜூலை 29)நடைபெற்றது. அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு சங்கத்தின் புதுச்சேரி மாநில செயலாளர் த.தமிழ்ச் செல்வன் தலைமை தாங்கி னார். இதில் லாசர் பேசிய தாவது;
இரட்டை எஞ்சின் ஆட்சி
புதுச்சேரியில் ஆட்சி அதிகாரத்தில் உள்ள முதல்வர் ரங்கசாமியும், ஒன்றியத்தில் ஆட்சியில் உள்ள மோடியும் ஒரே கூட்டணியில் இரட்டை எஞ்சின் ஆட்சி நடத்தி வரும்போது , ஏன் 100 நாள் திட்ட பயனாளிகளுக்கு ஒன்றிய ஆட்சியில் இருந்து போதிய நிதியை பெற்று கொடுக்கவில்லை. ஆட்சியாளர்கள் மக்களை பற்றி கவலை படவில்லை. கடந்த 9 ஆண்டுகளில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.400 லிருந்து ரூ.1200 என உயர்ந்துள்ளது. ரூ.800 கூடுதல் விலையை உயர்த்திய மோடி அரசு. விவசாய தொழி லாளர்களுக்கு நாள் ஒன்றின் கூலியை கூடுத லாக ரூ.100 கூட உயர்த்த முன்வருமா என லாசர் கேள்வி எழுப்பினார்.
இப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செய லாளர ஆர்.ராஜாங்கம், மூத்த தலைவர் முரு கன், சங்த்தின் தலை வர் வின்சென்ட், பொரு ளாளர் வழக்கறிஞர் தட்சணா மூர்த்தி உட்பட பலர் இதில் பங்கேற்றனர்.
முன்னதாக அண்ணா சிலையிலிருந்து ஊர்வல மாக வந்த விவசாய தொழிலாளர்களை சட்டப்பேரவை அருகே தடுப்பு வேலி களை அமைத்து காவல்துறை யினர் தடுத்து நிறுத்தினர்.