நாள்தோறும் வான்வெளியில் பல அதிசயங்கள் நடக்கின்றன. அந்த வகையில், வெள்ளிக்கிழமை (ஜன.3) முதல் சனிக்கிழமை (ஜன.4) வரை விண்கல் மழை பொழிய உள்ளது. இதனை வெறும் கண்களால் கண்டு ரசிக்கலாம். ஒவ்வொரு ஆண்டும் சில குறிப்பிட்ட நாட்களில் விண்கற்கள் மழை பொழியும். இதற்கு காரணம் வால் நட்சத்திரங்கள்தான். வால் நட்சத்திரங்கள் சூரியனை சுற்றி வருகின்றன. இது பூமியின் சுற்றுவட்ட பாதை வழியாக போகும் போது அதன் தூசிகளை, சிறு கற்களை விட்டு விட்டு செல்லும். பூமி இந்த தூசி துகள்களுக்கு அருகே வரும்போது, அந்த துகள்கள் ஈர்ப்பு விசையால் பூமிக்குள் நுழைகின்றன. இப்படி நடக்கும்போது வளிமண்டலத்தில் உரசி தூசிகள் எரிந்துவிடும். இதை பார்ப்பதற்கு விண்கல் மழையை போல தோன்றும். குவாட்ரண்ட் விண்கல் அந்த வகையில் நாளை குவாட்ரண்ட் விண்கல் மழை பொழிய இருக்கிறது. டிச.17ம் தேதி தொடங்கி ஜனவரி 16ம் தேதி வரை இந்த விண்கற்கள் பூமி மீது பொழியும். ஆனால் ஜன.3 மற்றும் 4ம் தேதிகளில்தான் இது உச்சத்தை எட்டும். அதாவது வெள்ளி, சனிக்கிழமை வானத்தில் நூற்றுக்கணக்கில் விண்கற்கள் மழையாய் பொழியும். ஆனால் சில மணி நேரங்கள் மட்டுமே இது நீடிக்கும் என்பதால், வாய்ப்பு இருப்பவர்கள் பார்க்க தவறாதீர்கள். இதை வெறும் கண்களால் பார்க்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு. அதிவேகம் இந்த விண்கற்கள் பூமி மீது மணிக்கு சுமார் 14,8059 கி.மீ வேகத்தில் மோதுகிறது. ஆனால் நமது வளிமண்டலத்தில் ஆக்சிஜன் அதிகம். எனவேதான் மோதிய வேகத்தில் தீப்பிடித்து எரிந்து சாம்பலாகி விடுகிறது. ஒரு மணி நேரத்திற்கு சுமார் 120 விண்கற்கள் வரை பூமிக்குள் நுழைகின்றன. வழக்கமாக சில விண்கல் நிகழ்வுகளை வெளிநாடுகளில் மட்டுமே பார்க்கும் வகையில் இருக்கும். ஆனால் இந்த விண்கல் மழையை இந்தியாவிலிருந்தே கண்டுகளிக்கலாம்.