புதுச்சேரி, அக்.29- சிறுபான்மையினர் மக்கள் நலக் குழுவின் அமைப்புக் கூட்டம் கிறிஸ்டோபர் தலைமையில் புதுச்சேரி முதலியார்பேட்டையில் நடைபெற்றது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் புதுச்சேரி துணைத் தலைவர் சத்தியா கூட்டத்தை துவக்கி வைத்து பேசினார். சிஐடியு மாநிலத் தலைவர் பிரபுராஜ் நோக்கங்கள் குறித்து பேசினார். புதுச்சேரியில் ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி அமைப்புகளால் சிறுபான்மையினருக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல் குறித்தும், மக்கள் ஒற்றுமை பாதுகாக்கும் நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர்கள் இந்த கூட்டத்தில் சத்தியா, கிறிஸ்டோபர், ரியாஸ்கான், அமானுல்லா ஆகிய 4 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக்கு தேர்வு செய்யப்பட்டது.நேரு, சேவியர், அஷ்ரஃப்,முகமது முஸ்தபா ஆகியோர் இணை ஒருங்கிணைப்பாளர்களாகவும் ஸ்டாலின் (முத்தியால்பேட்டை), ஆரோக்கியமேரி ( உருளையன்பேட்டை), ஜான் பீட்டர் ( சா.பி.தோட்டம்), அருள் மேரி (அரியாங்குப்பம்), இக்பால் பாஷா (பெரியார் நகர்) ஆகியோர் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்களாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.