சிதம்பரம், ஜூலை 1-
பிச்சாவரம் அறிஞர் அண்ணா சுற்றுலா மையத்தில் ரூ.14.07 கோடியில் நடந்து வரும் உட்கட்டமைப்பு மேம்படுத்தும் பணி களை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சார் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம், சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர் ஆய்வு செய்த னர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
கடலூர் மாவட்டத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தளமான பிச்சாவரம் அறிஞர் அண்ணா சுற்றுலா மையத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அவர்கள்து தேவைகளை நிறைவு செய்யும் வகையிலும், பயணிகள் வருகையை அதிகப் படுத்தும் நோக்கத்திலும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை பத்து மாதங்க ளில் விரைந்து முடிக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கை ஏற்று தீவுப்பகுதியில் ‘காட்டேஜ்’ அமைப்ப தற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, இந்த சுற்றுலா மையத்தை எழில் மிகு சுற்றுலா மையமாக மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு தெரிவித்தனர்.
திமுக மாநில செயற்குழு உறுப்பி னர் கிள்ளை ரவீந்திரன், கிள்ளை பேரூ ராட்சி மன்ற தலைவர் மல்லிகா, பரங்கிப் பேட்டை ஒன்றிய பெருந் தலைவர் கருணா நிதி சுற்றுலா மைய அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.