அம்பத்தூர், நவ.12- ஆவடி மாநகராட்சி பகுதி களில் ரூ.98.59 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை விரிவாக்க திட்டம் மற்றும் ரூ.59.92 கோடி மதிப்பீட்டில் விடுபட்ட பகுதி களுக்கு குடிநீர் விரி வாக்கத் திட்ட பணி தொடக்க விழா ஆவடி அருகே பட்டாபிராமில் உள்ள அரசு பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடை பெற்றது. இதற்கு சிறுபான்மையி னர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தலைமை வகித்தார். ஆவடி மேயர் கு.உதயகுமார், துணை ஆணையர் எஸ்.சூரிய குமார், ஆணையர் எஸ்.கந்தசாமி ஆகியோர் முன்னிலை வைத்தனர். இதில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு புதை சாக்கடை, குடிநீர் திட்ட விரிவாக்கப் பணி கள் மற்றும் நீர்த்தேக்க தொட்டிகளின் பயன் பாட்டை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியது, ஆவடி மாநகராட்சியில் ஒரு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் 4 மற்றும் 5 வார்டுகளுக்கு குடிநீர் திட்டப்பணிகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 2 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. மேலும் 5 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளின் பணிகள் 15 நாள்களுக்குள் முடிக்கப் பட்டு பயன்பாட்டுக்கு வந்து விடும். இதன் பிறகு ஆவடி மாநகராட்சியில் உள்ள பகுதிகளுக்கு எப்பொழுதும் குடிநீர் கிடைக்கும். தேர்வாய் கண்டிகை கூட்டு குடிநீர் திட்டம் தேர்வாய் கண்டிகை கூட்டு குடிநீர் திட்டப் பணிகள் மூலம் தனியாக ஆவடி மாநகராட்சிக்காக திட்ட அறிக்கை போட்டு போடப்பட்டுள்ளது. அதை யும் உரிய முறையில் பெற்று ஆவடி மாநகராட்சிக்கு முழுமையாக அனைத்து பகுதிகளுக்கும் 24 மணி நேரமும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும். தற்போது பாதாள சாக்கடை திட்டப் பணி களுக்கு, அதாவது விடு பட்டுள்ள 17,000 எண்ணிக்கை குடியிருப்பு களுக்கு வீட்டின் இணைப்பு வழங்குவதற்கு சுமார் 102.30 கி.மீ நீளத்திற்கு பகிர்மான குழாய் அமைக்க தனியாக ரூ.98.59 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகள் விரைவில் நடைபெறும் என்றார் நிகழ்வில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆ.கிருஷ்ண சாமி (பூந்த மல்லி), துரை சந்திரசேகர் (பொன்னேரி), மாவட்ட வரு வாய் அலுவலர் ஆ.இராஜ் குமார், ஆவடி மாநகரப் பொறியாளர் பி.வி.ரவிச்சந்திரன், துப்புரவு அலுவலர் முகைதீன், ஆவடி மண்டல குழு தலைவர்கள் ஜி.ராஜேந்தி ரன், அமுதா சேகர், என்.ஜோதிலட்சுமி, வி.அம்மு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.