விழுப்புரம் மாவட்டத்திற்கு உணவு வழங்கல் துறை ஆய்வு கூட்டத்திற்கு வருகை தந்த அமைச்சர்கள் க.பொன்முடி, அர.சக்கரபாணி ஆகியோர் காணை ஒன்றியத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையம் மற்றும் திறந்தவெளி நெல் கிடங்கு ஆகியவற்றை ஆய்வு செய்தனர். மாவட்ட ஆட்சியர் மோகன் உடனிருந்தார்.