திருவண்ணாமலை, நவ.20- திருவண்ணாமலை தீப விழாவை முன்னிட்டு கிரிவலப்பாதையில் பக்தர்க ளுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். தீப விழாவிற்கு வருவோர் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதி கரித்து கொண்டே வருகிறது. இந்த ஆண்டு மேலும் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், மாவட்ட ஆட்சியர் என்ற முறையில் எ.வ.வேலுவை திருவண்ணாமலையில் தங்கி இருந்து பணிகளை கவனிக்க முதல மைச்சர் அறிவுறுத்தியிருக்கிறார். அதன் அடிப்படையில் கிரிவலப்பாதை யில் செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வேலு, 24 மணி நேரமும் பக்தர்கள் கிரிவலம் வருவதால் இரவு நேரங்களில் தேவையான அளவு மின்விளக்கு வசதி செய்யப்பட்டுள்ளது. தேவையான அளவிற்கு கழிப்பிட வசதி மற்றும் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் நிதியில் இருந்து கிரிவலப்பாதையில் கேமராக்கள் அமைக்க நிதிகள் வழங்கப்பட்டு அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. கிரிவலம் வரும் பக்தர்கள் பாது காப்பிற்காகவும் சிறு சிறு குற்ற சம்பவங்கள் கூட நடைபெறாமல் தடுக்க காவலர்கள் சாதாரண உடையில் மக்களோடு மக்களாக கலந்து கண்காணிப்பு பணியில் இந்த ஆண்டு ஈடுபடுவார்கள் என்று அமைச்சர் தெரிவித்தார். மாவட்ட ஆட்சியர் பா. முருகேஷ், சி.என்.அண்ணாதுரை எம்பி, மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், தொழிலாளர் நல மேம்பாட்டு பிரிவு அரசு பிரதிநிதி இரா.ஸ்ரீதரன், நகராட்சி ஆணையர் ந.தட்சிணாமூர்த்தி மற்றும் பலர் உடனிருந்தனர்.