சென்னை, டிச. 4- மூலக்கொத்தளத்தில் சேதமடைந்த அடுக்குமாடி குடியிருப்புகளை சீரமைக்க நிதி ஒதுக்குவ தாக அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரி வித்துள்ளார். ராயபுரம் மூலக் கொத்தளத்தில் தமிழ்நாடு மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் சேத மடைந்துள்ளது. அவை தரமானதா? என ஐஐடி அண்ணா பல்கலைக்கழகம் மூலம் ஆய்வு செய்ய வேண்டும், சேதமடைந்த குடியிருப்புகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய துறை அமைச்சர் தா.மோ.அன்பரசனை சந்தித்து மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், பழைய வண்ணாரப்பேட்டை 53ஆவது வட்டத்திற்குட்பட்ட பகுதியில் பிளாக் ஏ முதல் எப் வரை 9 தளங்கள் கொண்ட குடியிருப்புகளும், பிளாக் ஜி முதல் ஐ வரை 11 தளங்கள் கொண்ட குடியிருப்புகள் என மொத்தம் 1,044 குடி யிருப்புகள் கட்டப்பட்டது. 2024ஆம் ஆண்டு வீடுகள் ஒதுக்கீடு செய்யும் பணி கள் துவங்கின. இது வரை வில்லிவாக்கம் 150, மதுரவாயல் 20, சிந்தா திரிப்பேட்டை 133, கண்ணப்பர் திடல் 114, ராம்தாஸ் நகர், பிரிவில் தோட்டம் 256 என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பால்டிப்போ மக்களுக்கு இன்னும் ஒதுக்கீடு செய்ய வில்லை. ராம்தாஸ் நகர், பிரிவில் தோட்டம் மக்க ளுக்கு 44 வீடுகள் ஒதுக்கீடு செய்யாமல் நிலுவையில் உள்ளது. 1044 குடியிருப்புகள் கட்டப்பட்டு 4 ஆண்டுகள் தான் ஆகின்றது. மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப் பட்டு சில மாதங்கள் கூட ஆகவில்லை. ஆனால் குடியிருப்புகள் சிதில மடைந்த நிலையில் உள்ளது. ஒரு பிளாக்கிற்கு 2 லிப்ட் உள்ளது. ஜி.எச்.ஐ. பிளாக்கில் ஒருலிப்ட் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. மேலும் குடியிருப்பு களின் 3, 4ஆம் தளங்க ளில் இருந்து நீர் வடிதல், தரைதளத்தில் நீர் ஊற்றெடுப்பு, கான்கிரீட் கலவை உதிர்தல், மின்சார பணிகள் முழுமை பெறா மல் உள்ளது. ஜன்னல்கள் பழுதடைந்து, கழிப்பறைகள் சேதமடைந்துள்ளது. படிக்கட்டில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மக்கள் பயன்பாட்டிற்கு போது மான தண்ணீர் வழங்கப்படு வதில்லை. எனவே குடியிருப்புகள் தரமாக கட்டப்பட்டுள்ளதா என்பது குறித்து ஐஐடி மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் மூலம் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இதற்கென நிதி ஒதுக்கீடு செய்து சேதங்கள் அனைத்தையும் முழுமையாக சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர், உட னடியாக சம்பந்தப்பட்ட அதி காரிகளை தொடர்பு கொண்டு ஆய்வு மேற்கொள்வதாக தெரி வித்தார். மேலும் சேதங்களை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்வதாகவும் உறுதியளித்தார். இதில் மதுரவாயல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் க.பீமாராவ், வடசென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.லோகநாதன், பகுதிச் செயலாளர் எஸ்.பவானி, பகுதிக்குழு உறுப்பினர்கள் டி.வெங்கட், ச.முருகேசன், நிர்வாகி ஏ.அழகுபாண்டி ஆகியோர் கலந்து கொண்ட னர்.