புதுக்கோட்டை, செப். 26- காலநிலை மாற்றப்பாதிப்பு களை எதிர்கொள்வதற்காக பசுமைத் தமிழகம் இயக்கம் சார்பில் நிகழாண்டில் மாநிலம் முழுவதும் 10 கோடி மரக்கன்றுகளை நடவு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் கூறினார். புதுக்கோட்டையில் அமைச்சர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகம் முழுவதும் பயோ மைனிங் முறைப்படி 249 இடங்களில் உள்ள குப்பைக் கிடங்குகள் சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. அவற்றில் 145-க்கும் மேற்பட்ட இடங்களில் பணிகள் முடிவடைந்து சுமார் ரூ. 200 கோடி மதிப்பிலான இடங் கள் மீட்கப்பட்டுள்ளன. இதேபோல, மீத முள்ள குப்பைக் கிடங்குகளும் பையோமைனிங் முறைப்படி சீரமைக்கப்படும். காலநிலை மாற்றம் என்பது உலகளாவிய பிரச்சனை. தமிழ்நாட்டில் பசுமைத் தமிழகம் இயக்கம் தொடங்கப்பட்டு கடந்த ஆண்டில் 7 கோடி மரக்கன்றுகள் நடவு செய்யப் பட்டன. நிகழாண்டில் 10 கோடி மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இவை மட்டுமல்லாது ஈரநிலங்கள் பாதுகாப்பு இயக்கம், கடல் அரிப்பு தடுப்பு முயற்சிகள், நீர்நிலைகள் பாதுகாப்பு, காற்று மாசடைவது தடுத்தல் போன்ற பணிகளும் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார்.