districts

img

சமூக சிந்தனையை தமிழோடு ஊட்டி வளர்த்தவர் கவிஞர் தமிழ்ஒளி

சென்னை, செப். 24 – கல்லூரிகள் தோறும் கவிஞர் தமிழ்ஒளியின் நூற்றாண்டு விழாவை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் சமூக  சிந்தனையை தமிழோடு ஊட்டி வளர்த்தவர் கவிஞர் தமிழ் ஒளி என்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கூறினார். கவிஞர் தமிழ்ஒளியின் தமிழ்வெளி ஓர் ஆய்வரங்கம் மற்றும் கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு நிறைவு விழா திங்களன்று (செப்.23) சென்னைப் பல்கலைக் கழ கத்தின் மெரினா வளா கத்தில் நடைபெற்றது. சென்னைப் பல்கலைக் கழ கத்தின் தமிழ் இலக்கியத் துறையும், கவிஞர் தமிழ் ஒளி நூற்றாண்டு விழாக் குழுவும் இணைந்து இந்நிகழ்வை நடத்தின. நிறைவு விழா நிகழ்வில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கலந்து கொண்டு, கவிஞர் தமிழ்ஒளியின் ‘குருவிப் பட்டி’ சிறுகதை தொகுப்பை வெளியிட்ட, தமுஎகச மாநிலத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம் பெற்றுக் கொண்டார்.  கவிஞர் தமிழ்ஒளி குறித்த ஓவியப்போட்டி, கட்டுரைப் போராட்டிகளில் வென்றோ ருக்கு பரிசளித்தார். அப்போது அமைச்சர் பேசிய தன் சுருக்கம் வருமாறு: தமிழ் ஒளி நூற்றாண்டு விழாவை சென்னை பல்கலைக் கழகத்தோடு நிறு த்தாமல், அனைத்து கல்லூரி களிலும் நடத்த வேண்டும். குறிப்பாக தமிழ்ஒளி பிறந்த கடலூர் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் விழாவை நடந்துங்கள். அதற்கான உதவிகளை அரசு செய்யும். தமிழ்ஒளி ஒலிக்கப்பட வேண்டிய காலம். அனைத்து இடத்திற்கும் பரவ வேண்டும். பாரதியார், பாரதிதாசன் வழியில் வந்த வர் தமிழ்ஒளி. தமிழ்ஒளிக்கு எடுக்கிற விழா அல்ல, தமிழை வளர்ப்பதற்காக எடுக்கிற விழா. தமிழை வளர்க்க தமிழ்ஒளி போன்ற கவிஞர்களின் கருத்துக் களை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்ல வேண்டும்.  கிராமத்தில் பிறந்திருந் தாலும் தமிழ் உணர்வோடு வளர்ந்த தமிழ்ஒளி, இலக்கியம் மக்களை சென்ற டைய போராடினார். சமூ கத்தை பற்றி சிந்தனை யோடுதான் கவிதை, கட்டுரை உள்ளிட்ட இலக்கி யங்களை தமிழ்ஒளி படைத் துள்ளார். சமூக சிந்தனையை தமிழோடு ஊட்டி வளர்த் தார். அவரை பின்பற்றி தமிழ் உணர்வை வளர்ப்போம். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்வில்  பாவலர் சு.சண்முகசுந்தரம், நூற்றாண்டு விழாக்குழு செயலாளர்  இரா.தெ.முத்து, நாடக கலைஞர் வா. அசோக்சிங் உள்ளிட்டோர் பேசினர். முன்னதாக நடைபெற்ற தொடக்க நிகழ்விற்கு நூற்றாண்டு விழாக்குழுத் தலைவர்  சிகரம் ச.செந்தில் நாதன் தலைமை தாங்கி னார். தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் ஒளவை ந.அருள், சென்னைப் பல்கலைக் கழகப் பதிவாளர் ச.ஏழு மலை, தமிழ் இலக்கியத் துறை தலைவர் ஆ.ஏகாம் பரம் ஆகியோர் பேசினர். நூற்றாண்டு விழாக்குழு பொருளாளர் வே.மணி நன்றி கூறினார். அதைத் தொடர்ந்து 6 தலைப்புகளில் திறனாய்வு அரங்கம் நடைபெற்றது. நாடகவியலாளர் பிரளயன், தமுஎகச பொருளாளர் சைதை ஜெ. பேராசிரியர்கள் கோ.பழனி, கணபதி இளங்கோ, க.ஜெயபாலன், ந.சுலோச்சனா, முனைவர் உமர் பாரூக், எழுத்தாளர்கள் களப்பிரன், மணிநாத், விஷ்ணுபுரம் சரவணன், உதயை மு.வீரையன், கவிஞர் நா.வே.அருள், மொழிபெயர்ப்பாளர் மயிலை பாலு, ஆய்வாளர் ரேவதி உள்ளிட்டு பலர் பேசினர்.