districts

img

பொன்னை ஆற்றின் குறுக்கே புதிய தடுப்பணை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்தார்

வேலூர், செப்.21 - வேலூர் மாவட்டம், காட்பாடி அருகேயுள்ள குகையநல்லூர் கிரா மத்தில் பொன்னை ஆற்றின் குறுக்கே ரூ.12.70 கோடி மதிப்பீட்டில் புதிய தடுப்பணை ஒன்று கட்டப்பட்டு திறப்பு விழா மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி தலைமையில் நடைபெற்றது. இந்த தடுப்பணையின் மூலம் குகையநல்லூர் தக்கான்பாளையம், ஸ்ரீபாத நல்லூர், ஏகாம்பரநல்லூர், மருதம்பாக்கம்,மேல்பாடி.வெப்பாலை,தேம்பள்ளி உள்ளிட்ட 10 கிராமங்களில் சுமார் 716 ஏக்கர் நிலங்கள் நிலத்தடி நீரும் கிணற்று நீரும் உயர்ந்து பயனடைவார்கள் இதில் 420 விவசாயிகளும் 5 ஆயிரம் பொதுமக்களும் பயனடைவார்கள். நிகழ்வில் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், குடியாத்தத்தில் மோர்தானா அணையை கட்டியதால் 60-க்கும் மேற்பட்ட ஏரிகளில் தண்ணீர் தேங்குகிறது. இந்த தடுப்பணையை கட்டி தண்ணீரை தேக்கி னோம். ஆனால் சிலர் தண்ணீரை இர வோடு இரவாக திறந்து விட்டுள்ளனர். அவர்கள் விரைவில் கைது செய்யப்  படுவார்கள். மாவட்ட ஆட்சி யரும் இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வா லாஜா பாலாறு அணைக் கட்டு கட்டப்பட்டு 200 ஆண்டு களாகிறது. தற்போது பழுதாகிவிட்டது அதனை புணரமைப்பது குறித்து அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்யவுள்ளேன் என்றார். இதில் வேலூர் மக்க ளவை உறுப்பினர் து.மு. கதிர் ஆனந்த், மாநக ராட்சி துணைமேயர் மா. சுனில்குமார், ஒன்றியக் குழுத்தலைவர் வேல் முருகன்,1 வது மண்டலக் குழுத்தலைவர் புஷ்பலதா வன்னியராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.