வேலூர், ஆக.2- வேலூர் மாவட்டம், காட்பாடி கல்புதூர் பகுதியில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பங்கேற்றார். இதைத் தொடர்ந்து, கரச மங்கலத்தில் காட்பாடி மற்றும் லத்தேரி ரயில் நிலையங்களுக்கு இடையே ரூ.29.14 கோடியில் சாலை மற்றும் மேம்பாலம் அமைக்கும் பணிக்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார். இதில் மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி, சட்டமன்ற உறுப்பினர் அமுலு, காட்பாடி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் வேல்முருகன், வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில் குமார் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.