திருவண்ணாமலை , ஜன.25- திருவண்ணாமலை மாவட்டத்தில், பெஞ்சால் புயலால் பெய்த தொடர் கன மழை காரணமாக டிசம்பர் மாதத்தில் மலையின் ஈரத்தன்மை காரணமாக ஏறத்தாழ 4 இடங்களில் மலைச் சரிவு ஏற்பட்டது. மலைச்சரிவு காரணமாக பாறை உருண்டு, திருவண்ணாமலை மாநகராட்சி வ.உ.சி நகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 நபர்கள் உயிரி ழந்தனர். அதன் தொடர்ச்சியாக மண்சரிவு கள் அகற்றும் பணியில் நெடுஞ்சாலை துறை மற்றும் மாநகராட்சி இணைந்து பணிகளை மேற்கொண்ட வருகிறது. மேலும் மண்சரிவு காரணமாக மண் சரிவானது மண் மேடுகளாக மக்கள் நடமாடும் பகுதிகளில் உருவாகியி ருந்தது. அதன் தொடர்ச்சியாக, இந்த பாறையை நவீன தொழில் நுட்பமுறை யில், அப்பகுதியில் உள்ளவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் உடைத்து அகற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணி களை பொதுப்பணித்துறை, நெடுஞ் சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், இப்பகுதியில் வசிக்கும் ஏறத்தாழ 20 குடும்பங்களுக்கு உடனடியாக தற்காலிக வாடகை வீட்டில் குடியமர்த்தப்பட்டனர். பிறகு, வருவாய்த்துறையினரால் அடை யாளத்தப்பட்டு அறக்கட்டளை சார்பாக வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு மறு குடி யமர்த்தப்பட்டனர் என்றார். தமிழ்நாடு முதலமைச்சர் உத்தர வுக்கிணங்க, ஐஐடி யைக் கொண்ட குழு வினர் மலைமீது ஆய்வு மேற்கொண்ட னர். அப்போது, மலை அடிவாரத்தில் சுமார் 40 டன் எடையுள்ள மிகப்பெரிய பாறை உருண்டு, குடியிருப்புகள் மீது விழும் அபாயம் உள்ளது என்றும் இதை, முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் அகற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். எனவே, அந்த பாறையை அகற்று வதற்கு தொழில்நுட்ப வல்லுநர்களின் ஆலோசனைப்படி, 20 பேர் கொண்ட குழுவினர் புதிய தொழில்நுட்பங்கள் மூலம் பாறையை உடைக்கும் பணியை துவங்கியுள்ளனர். இரண்டு நாட்களில் சுமார் 225 துளைகள் 5 அடி ஆழம் இடப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறு, சிறு துண்டுகளாக உடைக்கப்பட்டு அப்புறப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார், இந்த ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.இராம்பிரதீபன், மாநில தடகள சங்கத் துணை தலைவர் மரு. எ.வ.வே.கம்பன் ஆகியோர் உடனி ருந்தனர்.