districts

img

பட்டா குறித்து சைதாப்பேட்டையில் அமைச்சர் ஆய்வு

சென்னை, ஆக.8- சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அரசு பண்ணை, திடீர் நகர், அப்துல் ரசாக் தெரு, சாமியார் தோட்டம், செட்டி தோட்டம், நாகிரட்டி தோட்டம், அண்ணா கார்டன், நேரு நகர், கன்னிகாபுரம், களிக்குன்றம் மற்றும் கோட்டூர்புரம் எல்லையம்மன் கோவில் ஆகியபகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் வியாழனன்று (ஆக.8) பட்டா வழங்குதல் தொடர்பாக ஆய்வு\ மேற்கொண்டார்.  இந்த ஆய்வின்போது, சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மிசித்தார்த் ஜகடே, துணை மேயர் மு.மகேஷ் குமார், கோடம்பாக்கம் மண்டலக்குழுத்தலைவர் எம்.கிருஷ்ணமூர்த்தி, அடையாறு மண்டலக்குழுத்தலைவர் இரா.துரைராஜ், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.