சிதம்பரம், ஜூலை 6- சிதம்பரம் அருகே புதுச்சத்திரம் பேருந்து நிறுத்த மேம்பாலத்தில் லாரி ஒன்று டயர் பஞ்சர் ஆகி நின்று கொண்டிருந்தது. இந்த லாரியின் பின்புறத்தில் திண்டிவனத் தில் இருந்து காரைக்கால் நோக்கிச் சென்ற சிறிய ரக சரக்கு வாகனம் கோழி கழிவுகளை ஏற்றிக்கொண்டு சென்ற போது அதிகமாக மோதியது. இதில் வாகனத்தை ஓட்டி வந்த காரைக்கால் பகுதியை சேர்ந்த ஓட்டுநர் சையது முகமது(25 ) அவருடன் வந்த அதே பகுதியை சேர்ந்த முகமது ரியாஸ் ( 20)ஆகிய இருவரும் சம்பவ இடத்தில் பலியானார்கள். பிறகு, சம்பவ இடத்திற்கு வந்த புதுச்சத்திரம் காவல் துறையினர் பிரேதத்தை கைப்பற்றி கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.