சென்னை, அக். 14- ஒப்பந்த தொழிலாளர் கள் போராட்டத்தையடுத்து நிர்வாகம் கோரிக்கையை ஏற்றுக் கொண்டது. எம்எப்எல் ஒப்பந்த தொழிலாளர்கள் செல்போன் எடுத்து செல்ல திடிர் தடை விதித்த தால், 1,000 ஒப்பந்த தொழி லாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். வட சென்னை மணலி பகுதியில் சென்னை உரத் தொழிற்சாலை நிறுவனம் உள்ளது. இங்கு 200 நிரந்தர தொழிலாளர்களும், 1,000க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களும் வேலை செய்கிறார்கள். நேரடியாக உற்பத்தி, பராமரிப்பு, கழிவு நீர் சுத்திகரிப்பு என அனைத்து பணிகளிலும் ஒப்பந்த ஊழியர்கள் பணி யாற்றுகிறார்கள். இங்கு உற்பத்தியாகும் யூரியா, அமோனிய பாஸ்பேட் போன்ற உரங்கள் இந்தியா முழுவதும் வினியோகம் செய்யப்படுகிறது. மேலும் வெளிநாடுகளுக்கும் ஏற்று மதி செய்யப் படுகிறது. இந்த தொழிற்சாலை யின் மேற்கூரைகள் மாற்றப் பட்டு பல ஆண்டுகள் ஆகி றது. இதனால் மழை பெய்தால் உற்பத்தி செய்யப் பட்ட உரம் மழையில் நனைந்து நாசமாகிறது. தொழிலாளர்கள் நனைந்து கொண்டே பணியாற்று வதால் அவ்வப்போது கீழே விழுந்து அடிபடும் நிலை உள்ளது. ஆறு மாதத்திற்கு முன் இறந்த தொழிலாளி நாகப்பன் குடும்த்திற்கு சட்டப்படி வழங்க வேண்டிய பணப்பயன்கள் இதுவரை வழங்கப்படவில்லை. ஒப்பந்ததாரர்கள் பிஎப், இஎஸ்ஐ பணத்தை முறையாக செலுத்துவதில்லை. தொழி லாளர்களுக்கு வழங்க வேண்டிய சோப், துண்டு, ஆயில் கூட வழங்குவ தில்லை. 12 தொழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப் பட்டுள்ளனர். இப்படி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஓராண்டு காலமாக பேசிக் கொண்டி ருக்கும் நிலையில் திடி ரென்று ஒப்பந்த தொழி லாளர்கள் செல்போனை உள்ளே எடுத்துச் செல்ல தடைவிதித்தது நிர்வாகம். செல்போனை கேட்டில் வைப்பதற்கு எந்த ஏற்பாடும் செய்யவில்லை. ஏற்கனவே தங்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து கவலைப்படாத நிர்வாகம் திடிரென்று செல்போனை உள்ளே எடுத்து செல்லக் கூடாது என்றது தொழி லாளர்களிடையே பெரும் கோபத்தை உருவாக்கியது. இதையடுத்து தொழி லாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு நிறுவனம் பேச்சு வார்த்தை நடத்தி, செல்போனை எடுத்து செல்ல அனுமதிப்பது. வேலை நீக்கம் செய்யப் பட்ட 12 பேரை வேலைக்கு எடுத்துக் கொள்வது, பிற கோரிக்கைகளை பேசி தீர்த்துக் கொள்ளலாம் எந்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தொழிலாளர் கள் வேலைக்கு திரும்பினர்.