மெட்ரோ ரயில் சேவை இன்று முதல் அதிகரிப்பு
சென்னை,நவ.26- பயணிகள் காத்திருப்பு நேரத்தை குறைப்பதற்கு இரண்டு வழித்தடங்களிலும் நெரிசல் மிக்க நேரங்கள் இல்லாது மற்ற நேரங்களில் 9 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவை கள் திங்கட்கிழமை (நவ.27) முதல் 7 நிமிட இடை வெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரி வித்துள்ளது. இது குறித்து அதிகாரி கள் கூறியதாவது:- சென்னை மெட்ரோ ரயில்களில் அலுவலக நேரம் அல்லாத மற்ற நேரங்களிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக, மழை காலம் தொடங்கி உள்ளதால், போக்குவரத்து நெரிசல் இன்றி விரைவாக பயணம் செய்ய மெட்ரோ ரயில்களில் மக்கள் அதிகளவில் பயணம் செய்ய விரும்புகின்றனர். எனவே, நெரிசல் மிக்க நேரம் அல்லாத மற்ற நேரங்களிலும் மெட்ரோ ரயில்களின் சேவை அதிகரிக்கப்பட்டு 7 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். மேலும், மெட்ரோ ரயில் நிலையங்களில் கூடுதல் நகரும் படிக்கட்டுகள், மின் தூக்கி வசதி மற்றும் இணைப்பு வாகன வசதியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இளைஞரிடம் ரூ.1.87 லட்சம் மோசடி
விழுப்புரம்,நவ.26- விழுப்புரம் மாவட்டம்,கண்டாச்சிபுரம் அருகே உள்ள சித்தாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவபாலன் (39). அவரது கைபேசி எண்ணிற்கு கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில், கைப்பேசி சேவைக்கு கோபுரம் (டவர் அமைக்க இடம் தேவைப்படுவதாகவும், அந்த இடத்துக்கு முன் பணமாக ரூ.40 லட்சம், மாத வாடகையாக ரூ.45 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் குறிப்பிடப்பட்டிருந்தது கைபேசி எண்ணிற்கு சிவபாலன் தொடர்பு கொண்டுள்ளார். எதிர்முனையில் பேசிய அடையாளம் தெரியாத நபர், நில விவரங்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளார். ‘வாட்ஸ்-ஆப்’ மூலம் அனுப்பி வைத்துள்ளார். இதையடுத்து, அடையாளம் தெரியாத நபர் மீண்டும் சிவபாலனிடம் பேசியபோது, கைப்பேசி சேவை கோபுரம் அமைக்க உங்களது இடம் தேர்வாகியுள்ளது. ஆனால், அதற்கான பதிவுக் கட்டணம், ஜிஎஸ்டி வரி, கோபுர உதிரி பாகங்களுக்கு செலவுத் தொகையை வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். பிறகு, அந்த நபர் கூறிய வங்கிக் கணக்கு எண்ணுக்கு சிவபாலன் 10 தவணைகளில் மொத்தம் ரூ.1,81,790 ரொக்கத்தை அனுப்பி வைத்துள்ளார். அதன்பிறகு அந்த நபரை மீண்டும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் மாவட்ட சைபர் குற்றப்பிரிவு காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.