districts

சென்னை முக்கிய செய்திகள்

சொத்துவரி உயர்வுக்கு வணிகர் பேரமைப்பு எதிர்ப்பு

சென்னை, செப். 29- சொத்துவரி உயர்வுக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டு களுக்கு முன்னர் சொத்துவரி பல மடங்கு உயர்த்தப்பட்டது. வணிகக் கட்டிடங்க ளுக்கு கூடுதலாக வரி விதிக்கப்பட்டது. அதே நேரத்தில் மின் கட்டணமும் உயர்த்தப்பட்டது. சொத்துவரி உயர்வு மற்றும் மின் கட்டண உயர்வுகளால் தொழில் மற்றும் வர்த்தகத்துறையில் பல்வேறு வகையான பாதிப்புகள் ஏற்பட்டு, அந்த பாதிப்பு நுகர்வோரையும் சேர்த்து பணச்சுமை மற்றும் மனச்சுமைக்கு உள்ளாக்கியது. அதில் இருந்து இதுவரை மீண்டுவர இயலாத நிலையில் தற்போது சென்னை பெருநகர மாநகராட்சியில் சொத்துக்களின் மீது 6 விழுக்காடு கூடுதல் வரி விதிப்புக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது. கடந்த மாதம் பன்மடங்கு உயர்த்தப்பட்ட உரிமக்கட்டணமும், தொழில் வரியும் நீக்கப்பட வேண்டும் என்ற பேரமைப்பின் கோரிக்கை நிலுவையில் இருக்கும் நிலை யில், மீண்டும் சொத்துவரி உயர்வு என்பது வணிகர்களுக்கு மிகப்பெரும் சுமை என்பதை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தமிழக அரசுக்கு மிகவும் அழுத்தமாக தெரிவிக்க கடமைப்பட்டுள்ளது. தொடர்ந்து ஏற்றப்படும் வரிச்சுமைகள் நிறைவாக நுகர்வோர்களையும், பொது மக்களையும் பாதிப்புக்கு உள்ளாக்கி, இதனால் பொருட்களின் விலைவாசி உயர்வு ஏற்பட்டு, பொருளாதார தாக்கத்தை உருவாக்கும் என்பதோடு, தொழில்-வணிக நலிவு காரணமாக வேலைவாய்ப்புகளும் பறிபோகும் நிலை உருவாகும். இது அரசுக்கு எதிர்ப்பான மனநிலையை வணிகர்கள், பொதுமக்கள் மத்தியில் உருவாக்கும் என்பதால், உடனடி யாக சொத்துவரி உயர்வை நிறுத்தி வைக்க, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வணிகர்கள், நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ரேசன் அரிசி கடத்தல்: முக்கிய குற்றவாளி கைது

அம்பத்தூர், செப்.29 - சென்னையில் இருந்து ஆந்திரா வுக்கு ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியை காவல் துறையினர் கைது செய்தனர். சென்னை எண்ணூர் பகுதியில் இருந்து ஆந்திராவிற்கு ரேஷன் அரிசி கடத்திச் செல்வதாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல் துறையினருக்கு அண்மையில்  ரகசியத் தகவல் கிடைத்தது. இதை யடுத்து காவல் துறையினர அத்திப்பட்டு பிரதான சாலை சிக்னல் அருகே சந்தேகத்திற்கு இடமாக சென்ற சரக்கு வாகனத்தை மடக்கி சோதனை செய்த னர். அப்போது அதில் 2,050  கிலோ எடை கொண்ட ரேஷன்அரிசி இருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக திரு வள்ளூர் மாவட்டம், கும்மிடிப் பூண்டி, பெரிய ஓபளா புரத்தைச் சேர்ந்த மதன்குமார் என்பவரையும்  பிரவீன்குமார் என்பவரை யும் கைது செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

தமிழக மீனவர்களை விடுவிக்க தூதரக நடவடிக்கை மேற்கொள்க! 

சென்னை,செப்.29-  இலங்கைக் கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதை தடுத்திடவும், சிறைப்பிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திடவும் வலுவான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர்  எஸ். ஜெய்சங்கருக்கு செப்டம்பர் 29 ஞாயிறன்று முதலமைச்சர்   மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். அவர் அனுப்பிய கடிதம் வருமாறு: இராமேஸ்வரம் மீன் பிடித்தளத்திலிருந்து ஐசூனு-கூசூ-10-ஆஆ-411 மற்றும் ஐசூனு-கூசூ-10-ஆஆ-544  பதிவு எண்களைக் கொண்ட இரண்டு படகுகளில் 28.09.2024 அன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த 17 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றிருந்தனர். இந்நிலையில் செப்டம்பர் 29 அன்று நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.   தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்படுவதும், அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் கடலோர பகுதிகளில் வாழும் மீனவ சமுதாயத்தினரிடையே மிகுந்த துயரத்தையும், அவர்களது வாழ்வில் நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்தியுள்ளது.  இந்த சிக்கலான பிரச்சனையை தூதரக ரீதியாக தீர்த்திட உறுதியான மற்றும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று தான் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளேன். நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, செப்டம்பர் 27 அன்று பிரதமரிடம் சமர்ப்பித்த கோரிக்கைகளில் ஒன்றாக இந்தக் கோரிக்கையையும் வலியுறுத்தியுள்ளேன்.  எனவே, நமது மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்கவும், சிறைப்பிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் இலங்கை அரசிடமிருந்து உடனடியாக விடுவிக்கவும், வலுவான மற்றும் பயனுள்ள தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயி தற்கொலை 
சிபிஎம் மாவட்டச் செயலாளர் அறிக்கை!

விழுப்புரம், செப்.29- விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டம், கெங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மோகன்ராஜ்.  இவர், தேவனூர் கிராமத்தில் உள்ள நீர்வரத்து வாய்க்கால் நீர் ஓடை, சின்னதாளிகள் ஏரி   என இரண்டு  நீர்வழிகளில் உள்ள அரசு புறம் போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து நெல், கரும்பு பயிர் விவசாயம் செய்து வருகிறார். இந்த ஓடையை நம்பி விவசாயம் செய்து வந்த  40 க்கும் மேற்பட்ட விவ சாயிகள் தற்போது, தண்ணீர் கிடைக்கா மல் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்த ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று கெங்கபுரம் ஊராட்சியை சார்ந்த விவ சாயிகள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.அதைத் தொடர்ந்து, மேல்மலையனூர் வருவாய் வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகி யோர் விசாரணை செய்து ஆக்கிரமிப்பாளர் மோகன்ராஜிடம் ஆக்கிரமிப்பை அகற்று மாறு கேட்டுக்கொண்டனர். ஆனால், ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை. இதனால், செப். 23 அன்று விவ சாயிகள் மாவட்ட ஆட்சியரை மீண்டும் சந்தித்து நினைவூட்டல் மனு அளித்தனர். அப்போதும், நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் செப்.27 அன்று  போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதை யடுத்து, மேல்மலையனூர் வட்டாட்சியர் விவசாயிகளையும் , மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி நிர்வாகிகளையும் அழைத்து  மேல்மலையனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். அக். 7 அன்று மாவட்ட ஆட்சியர் விசா ரணை நடத்த உள்ளார். இந்த தகவல் சம்பந்தப்பட்ட  மோகன்ராஜிக்கு  கடிதம் மூலம் வட்டாட்சியர்  தெரிவித்தார். மாவட்ட ஆட்சியர் விசாரணைக்கு பிறகு, ஆக்கிரமிப்பை அகற்றுவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.இந்த சூழ்நிலையில், அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்திருந்த மோகன்ராஜ் தனது உடலில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு வட்டாட்சியர் அலு வலகத்தில் தீக்குளித்து  தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.அதில், விவசாயி மோகன்ராஜ் தற்கொலை செய்து கொண்டது மிகவும் வருத்தமளிக்கிறது. அவருக்கு ஆழ்ந்த இரங்கலும் அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்தவரைக்கும், பொது மக்களின்  கோரிக்கைகளுக்காக மக்களோடு களத்தில் நின்று  போராடி வரும் கட்சியாகும்.  என்றைக்கும் சுயநலப்போக்குடன் இருந்ததில்லை. தனி நபரை பாதிக்கும் வண்ணம் எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபட்டதில்லை. நீர் ஓடை சம்பந்தப்பட்ட பிரச்சினை மாவட்ட  ஆட்சியர் விசாரணையில்  இருக்கும் நிலையில் மேற்படி மோகன்ராஜ் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது வருத்தமளிக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

ராணிப்பேட்டை, செப். 29 -  ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வியாழக்கிழமை (அக்.3) காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில், ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் தெரிவிக்கும் குறைகளுக்கு பதிலளிக்க உள்ளார்கள்.எனவே, ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள்  பிரச்சனைகளை களைத்திட இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பொது பிரச்சனைகளை கோரிக்கை வாயிலாகவும், தனிநபர் பிரச்சனைகளை மனுக்கள் வாயிலாகவும் தெரிவிக்குமாறு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா கேட்டுகொண்டுள்ளார்.

கட்சியிலிருந்து நீக்கம் 

கிருஷ்ணகிரி, செப்.29- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேன்கனிக்கோட்டையை சேர்ந்த ஏ.சாம்ராஜ், தளி கூ.வெங்கடேஷ்,     சந்திரசேகர் ஆகியோர் செப்.29 முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்டச் செயலாளர் ஜி.கே.நஞ்சுண்டன் தெரிவித்திருக்கிறார்.

அண்ணாமலை பல்கலை கழகத்தில் ஆய்வு பூங்கா அமைக்க கோரிக்கை

சிதம்பரம், செப்.29- சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்கள் பணியாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் ஆறு.அன்பு அரசன், பேராசிரியர் பழனிவேல் ராஜா ஆகியோர் உயர்கல்வித்துறை அமைச்சர், அரசின் தலைமைச் செயலாளருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.  அதில், கலைஞர் நூற்றாண்டு நிறைவையொட்டி அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த புதுமை ஆய்வு பூங்கா அமைக்க வேண்டும். இதனால் உயர் கல்வி நிறுவனங்களான பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப்படும் உயர் ஆய்வுகள் சமூக பயன்பாட்டிற்கு உரியதாக இருக்கும்.அதேபோல் தமிழ் மொழியின் பெருமிதங்களை உலகறிய செய்த வருமான கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி, ஒருங்கிணைந்த புது புதுமை ஆய்வு பூங்கா அண்ணாமலை பல்கலைகழகத்தில் தோற்றுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.