districts

பாதாள சாக்கடையில் மனிதர்கள் இறங்குவதை தடை செய்க சென்னை மாநகராட்சிக்கு சிபிஎம் வலியுறுத்தல்

சென்னை, செப்.30 – பாதாள சாக்கடை யில் மனிதர்கள் இறங்கு வதையும், தனியார் கழிவு களை அகற்றும் பணியில் ஈடுபடுவதையும் தடை செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. பாதாள சாக்கடை, கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியின்போது இறப்பவர்களின் சட்டப்பூர் வமான வாரிசுகளுக்கு, தடை செய்யப்பட்ட மனித கழிவுகளை அகற்றும் தொழில்புரிவோர் தடுப்பு மற்றும் அவர்களது மறுவாழ்வு சட்டம்-2013ன் படியும், உச்ச நீதிமன்றத்தின்  உத்தரவின்படியும் 10  லட்சம் ரூபாய் இழப்பீடு  வழங்கப்பட வேண்டும்.  ஆனால் அவ்வாறு முறை யாக வழங்குவதில்லை. இந்நிலையில் 2021ம் ஆண்டு நவம்பர் 10 தேதி ஒரு  வழக்கை விசாரித்த உச்ச  நீதிமன்றம், இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்க உத்தரவிட்டது. இதனை யடுத்து இழப்பீட்டுத் தொகையை 15 லட்சம் ரூபாயாக உயர்த்தியும், ஒவ்வொரு 3 வருடங்க ளுக்கு பிறகு 1.50 லட்சம் ரூபாய் கூடுதலாக வழங்கவும் தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசாணை வெளியிட்டது. இதற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் செப்.29 அன்று நடைபெற்ற பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை வரவேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை  மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் விடுத்துள்ள அறிக்கையில், பாதாள சாக்கடை, கழிவுநீர் தொட்டி  சுத்தம் செய்யும் பணியில்  மனிதர்களை இறக்குவதை யும், தனியார் ஈடுபடுவதை யும் சென்னை மாநகராட்சி தடை செய்ய வேண்டும். இந்தப் பணிகளை மாநக ராட்சி வாயிலாக மட்டுமே செய்ய உத்தரவிட வேண் டும். இத்தகைய மரணங்கள்  நிகழும்போது காவல்துறை உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிய வேண் டும் என்று வலியுறுத்தி உள்ளார்.