districts

img

காலமானார்

சென்னை, நவ. 23 - இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பின ரும், மத்தியசென்னை மாவட்ட துணைத் தலைவருமான தமிழின் தாயார் சுமித்ரா வியாழனன்று (நவ.21) சாலை விபத்தில் அகால மரணமடைந்தார். அவருக்கு வயது 39. கள்ளக்குறிச்சி மாவட்டம், மாடூர் கிராமத்தில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு கட்சியின் கள்ளக் குறிச்சி மாவட்டச் செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர், செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஆனந்தன், எம்.கே.பழனி, வட்டச் செய லாளர் வி. ஏழுமலை, மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா,செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.முரளி, எஸ்.கே.முருகேஷ், கே.முருகன், மாவட்ட குழு உறுப்பி னர்கள் ஜி.ஆனந்தன், இந்திய மாணவர் சங்கத்தின் மத்தி யக்குழு உறுப்பினர் எஸ்.மிருதுளா, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மத்தியக்குழு உறுப்பினர் செல்வ ராஜ் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி னார். இதனைத் தொடர்ந்து அவரது இறுதி நிகழ்ச்சி நடை பெற்றது.