districts

img

வளத்தி ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்துக

விழுப்புரம்,அக்.14- வாகன போக்குவரத்து அதிகம்  உள்ள வேலூர்- விழுப்புரம் நெடுஞ்சாலை வளத்தியில் இயங்கி வரும் ஆரம்ப சுகாதார  நிலையத்தை 24- மணி நேரமும்  மருத்துவர் மற்றும் பணியாளர்க ளுடன் இயங்க நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேல்மலையனூர் வட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டார சிபிஎம்  மாநாடு எய்யில் ராஜா, காண்டீபன், கர்லீனா ஆகியோர் தலை மையில் நடைபெற்றது. கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர்  உ.வாசுகி மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.குமார், ஆர்டி‌.முருகன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.ராதாகிருஷ்ணன் மாநாட்டை முடித்து வைத்து பேசினார். புதிய வட்டக்குழு 11- பேர் கொண்ட  புதிய வட்ட குழு தேர்வு செய்யப் பட்டது. அதன் செயலாளராக எஸ்.கே.எஸ்.ஹரிஹர குமார் தேர்வு செய்யப்பட்டார்.  தீர்மானங்கள் மேல்மலையனூர் வட்டத்தில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும், கிராம மக்கள் அனைவருக்கும் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றினர்.