சென்னை, ஆக. 10-
சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இதுவரை ராயபுரம், திருவிக நகர், அடையாறு மண்டலத்தில் பொதுமக்க ளிடம் இருந்து மொத்தம் 889 மனுக்கள் பெறப்பட்டு அதில் 720 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
இந்நிலையில் 4ஆவது முறையாக திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் வியாழனன்று (ஆக. 10) மேயர் பிரியா பொது மக்களிடம் இருந்து மனுக் களை பெற்றார். பின்னர் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தர விட்டார். அதைத்தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் 3 பெண்களுக்கு தையல் இயந்திரம், கர்ப்பிணி களுக்கு ஊட்டச்சத்து பொருட்களை மேயர் வழங்கினார்.
இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் மாதவரம் சுதர்சனம், கே.பி.சங்கர், துணை மேயர் மகேஷ் குமார், மண்டலக் குழு தலைவர் தி.மு.தனியரசு, 4ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.