districts

img

ராணிப்பேட்டையில் மே தினப் பேரணி, பொதுக்கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட சிஐடியு சார்பில் புதனன்று (மே. 1) மே தின பேரணி ராணிப்பேட்டை ராஜேஸ்வரி திரையரங்கம் அருகில்  இருந்து புறப்பட்டு பேரணி நவல்பூர் வழியாக முத்துக்கடை பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது. முத்துக்கடை வேம்புலி அம்மன் கோவில் அருகில் மாவட்ட தலைவர் ஆர். வெங்கடேசன் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் சிஐடியு மாநில துணைத் தலைவர் ஆர். கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட செயலாளர் அ. தவராஜ், பொருளாளர் என். ரமேஷ், வாலாஜா பொது தொழிலாளர் சங்கம் தலைவர் என். காசிநாதன், லிக்காய் மாநில செயலாளர் தா. வெங்கடேசன், மல்லாடி தலைவர் ஜெயக்குமார், உள்ளாட்சித் துறை செயலாளர் ஏபிஎம். சீனிவாசன், ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் பி. மணி, செயலாளர் கேகேவி. பாபு, அங்கன்வாடி மாநில இணை செயலாளர் வி. அமுதவள்ளி, அரக்கோணம் பொது தொழிலாளர் சங்கம் செயலாளர் சி. துரைராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மின் ஊழியர் மத்திய அமைப்பு திட்ட செயலாளர் இன்பநாதன் நன்றி கூறினார்.

;