புதுச்சேரி, ஆக. 11- புதுச்சேரியில் வீதிக்கு வீதி திறக்கப்பட்ட ரெஸ்ட்ரோ பார்களை மூடக் கோரி மாதர் சங்கத்தின் சார்பில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. புதுச்சேரி மாநிலத்தில் மூடிக்கிடக்கும் ரேசன் கடைகளை திறக்க வேண்டும். மகளிர்களுக்கான இலவச பேருந்துகளை இயக்க வேண்டும். மகளிர் ஆணையத்தை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருவடிக்குப்பத்தில் துவங்கிய பிரச்சாரத்திற்கு, அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் மாநிலத் தலை வர் முனியம்மாள் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் இளவரசி பிரச்சாரத்தை துவக்கி வைத்தார். மாநில நிர்வாகிகள் சத்தியா, உமா சாந்தி, மாலதி மற்றும் திரளான பெண்கள் பிரச்சாரத்தில் பங்கேற்றனர். பாரதி நகர், இலாஸ்பேட்டை, பாக்க முடையான் பேட்டை, புதுச்சேரி நகரம் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் நடை பெற்றது.