districts

img

குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிராக திருவொற்றியூரில் மாதர் சங்கம் பிரச்சாரம்

சென்னை, ஜூன் 20- குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிரான பிரச்சாரத்தை அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் தொடங்கியுள்ளது. குழந்தைகள் பாதிக்கப்படும்போது, சமூகம், குடும்பம், அரசு செய்ய வேண்டிய பணிகளை பட்டியலிட்டு ஜூன் 17 முதல் 22ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் 41 மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்கிறது.

குழந்தைகள் மீதான வன்முறைகளை தடுத்து நிறுத்த அரசும், சமூகமும் அக்கறையோடு செயல்பட வேண்டும், வன்முறை வழக்குகள் வரும் போது காவல்துறை உரிய சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும்  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பொதுமக்களிடம் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.

அதன் ஒருபகுதியாக திருவொற்றியூர் சுனாமி குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற பிரச்சாரத்தை சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.பாக்கியம் தொடங்கி வைத்தார். இதில் பகுதித் தலைவர் அலமேலு, செயலாளர் கஸ்தூரி, மாநிலக்குழு உறுப்பினர் தேவி, நிர்வாகிகள் பிரமிளா, செல்வகுமாரி, புஷ்பா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.