districts

img

யுகேஜி குழந்தைக்கு, ஆசிரியர்களால் பாலியல் கொடுமை துணைபோகும் தனியார் பள்ளி நிர்வாகம் - காவல்துறை

சென்னை, மார்ச் 19 - கூடுவாஞ்சேரியில் உள்ள வித்யா மந்திர் பள்ளியில் யுகேஜி (UKG) படிக்கும் 5 வயது குழந்தைக்கு பாலி யல் கொடுமை இழைக்கப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் மீதும், அவர்களுக்கு துணைபோகும் பள்ளி நிர்வாகம், காவல்துறை மீதும்  தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக, தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்  மகேஸ் பொய்யாமொழிக்கு, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ். வாலண்டினா, பொதுச்செயலாளர் அ. ராதிகா ஆகியோர் கடிதம் ஒன்றை  எழுதியுள்ளனர். அதில் அவர்கள் கூறி யிருப்பதாவது: செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ் சேரியில் உள்ள வித்யா மந்திர் பள்ளியில் UKG படிக்கும் 5  வயது பெண் குழந்தையிடம், அதே பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றும் ராசைய்யா (வயது 30), காயேஸ்குமார் (வயது 40), ஆகிய இரண்டு ஆசிரியர்கள் பல்வேறு வகை யில் பாலியல் சீண்டல்கள் மற்றும்  பாலியல் தொல்லைகள் கொடுத்துள் ளனர்.

குழந்தை வீட்டில் விளையாடுகிற போதும், குழந்தையின் இயல்பான செயல்பாட்டிலும் மாற்றத்தை கண்ட குழந்தையின் தாய் கே.சங்கீதா க/பெ. தட்சணாமூர்த்தி அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் அந்த குழந்தைக்கு உடல்நிலை சரியில்லா மல் போன நிலையில், மருத்துவரின் ஆலோசனையின் பேரில் தாயார் சங்கீதா, குழந்தையிடம் விசாரித்த போது, ஆசிரியர்கள் ராசையா, காயேஸ்குமார் இருவரும் குழந்தைக்கு பாலியல் சீண்டல் மற்றும் பாலியல் தொல்லை கொடுத்தது  தெரிய வந்துள்ளது. சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை குழந்தை அடை யாளமும் காட்டியுள்ளது. குழந்தை சொன்ன விவரங்களை வைத்து, குழந்தையின் தாயார் சங்கீதா, பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்துள்ளார். ஆனால், பள்ளியின் தலைமை ஆசிரியர் அந்தப்  புகாரை பொருட்படுத்தாமல், குழந்தை யின் பெற்றோர் மீது குற்றம் சாட்டி  பிரச்சனையைத் திசைத் திருப்பி யுள்ளார்.  இவ்வாறு பள்ளி நிர்வாகத் தரப்பில் இருந்து எந்த நடவடிக்கையும் இல்லாததால், சங்கீதா தம்பதியினர், வண்டலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத் துள்ளனர். காவல்துறை விசாரனை செய்து 02.03.2024 அன்று வழக்கு பதிவு செய்து (FIR No: 4 of 2024 u/s  9(m),9(f) r/w 10 of Pocso act) குழந்தை யால் அடையாளம் காட்டப்பட்ட இரண்டு ஆசிரியர்களை கைது செய்து  சிறையில் அடைத்துள்ளது.

அதேநேரம் காவல்துறையானது, பள்ளி நிர்வாகத்தை காப்பாற்றும் நோக்கத்தோடு, குழந்தையின் பெற்றோரையும் மிரட்டுகின்ற தொனியில் பேசியுள்ளது. சட்டப் பிரிவு கள் பதிவு செய்ததில் 12 வயதுக்கு  கீழான குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமை செய்கின்ற பிரிவு மட்டும் தான் போடப்பட்டுள்ளது.  அந்த குழந்தைக்கு மேற்கண்ட ஆசிரியர்கள் கடந்த 6 மாதங்களாக பல்வேறு பாலியல் சீண்டல்கள் செய்துள்ளனர். பாலியல் சீண்டல்,  தொல்லை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இருட்டறைக் குள் குழந்தையை அழைத்து சென்றுள்ளனர். இதற்கான சட்டப்  பிரிவுகள் எதுவும் போடப்படவில்லை. எப்ஐஆர் (FIR) பதிவு செய்த பின்பு  காவல்துறை அதிகாரிகள், குழந்தை யின் பெற்றோரிடம் சொல்லி நடந்த விபரங்களை குழந்தை சொல்லச் சொல்ல வீடியோ எடுத்து அதனை வாங்கிச் சென்றுள்ளனர். மேலும் குழந்தையையும் பெற்றோர்களையும் காவல்நிலையம் வர வைத்து குற்றவாளிகளின் புகைப்படங்கள் உள்பட பல புகைப்படங்களை வைத்து அடையாளம் காட்டச் சொல்லி யுள்ளனர். குழந்தையும் அடையாளம் காட்டியுள்ளது. மீண்டும் குற்றவாளி களையும், பாதிக்கப்பட்ட குழந்தையை யும் நேரில் மிக அருகில் நிற்கச் சொல்லி அடையாளம் காட்டச் சொல்லி யுள்ளனர்.  உடைகளை மாற்றியும், கண்களை கட்டியும் என 3, 4 முறை  குற்றவாளிகளை அடையாளம் காட்டச் சொல்லியுள்ளனர். குற்றவாளி களோ நேரடியாக குழந்தையையும், பெற்றோரையும் மிரட்டியுள்ளனர்.

மேலும் காவல்துறையிடம் இருந்த குழந்தை பதிவு செய்த வீடியோ ஆதாரம், மேற்படி பள்ளியின் வாட்ஸ்  ஆப் குழுவில் வந்துள்ளது. இதனை  கண்ட பெற்றோர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். “அந்த வீடியோ உருமாற்றங்கள் செய்யப்பட்டது, பொய்யானது உங்கள் மீதே நடவடிக்கை எடுப்பேன்” என சோழிங்க நல்லூர் காவல் ஆணையாளர் அலுவலகத்தில்  காவல்துறையினர், பாதிக்கப்பட்ட பெற்றோரை மிரட்டியுள்ளனர். காவல்துறையினரின் மேற்கண்ட நடவடிக்கைகள், அவர்கள் பள்ளி நிர்வாகத்திற்கும் குற்ற வாளிகளுக்கும் ஆதரவாக இருப்ப தாகவே கருத வேண்டி உள்ளது. அந்த பள்ளியில் மேலும் சில குழந்தைகளும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர் என்கிற தகவலும் கிடைத்துள்ளது. மாநில குழந்தைகள் ஆணையமும், மாநில மகளிர் ஆணையமும் பள்ளியில் விசாரணை நடத்திட வேண்டும்.

அந்த பள்ளியின் மற்ற குழந்தைகளிடம் விசாரித்தால், மேலும் பல உண்மைகள் தெரிய வரும். இதுபோன்ற மோசமான குற்ற  செயல்களுக்கு ஆதரவாக உள்ள பள்ளி நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அது உதவி செய்யும்.  அந்த அடிப்படையில் மேற்கண்ட வழக்கில் குற்றவாளிகளை பிணை யில் விடாமல் விரைந்து குற்ற பத்திரிகை தாக்கல் செய்திட வேண்டும்.  குற்றவாளிகளை நீதிமன்ற காவலிலேயே வைத்து 3 மாதத்திற்குள் சாட்சிகள் அனைவரையும் விசாரித்து வழக்கை விரைந்து முடித்திட வேண்டும். குற்றவாளிகளுக்கு கடுமை யான தண்டனைகள் வழங்கிட உரிய  நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும். குழந்தையின் பெற்றோர்களிடம் அலட்சியமாக நடந்துகொண்டு, அவர்களை மிரட்டிய பள்ளி நிர்வா கத்தின் மீது பள்ளிக் கல்வித் துறையின் சார்பாக நடவடிக்கை எடுத்திட வேண்டும். குற்றவாளிகளுக்கும், பள்ளி நிர்வாகத்திற்கும் ஆதரவான நிலைப்பாட்டோடு குழந்தையையும், பெற்றோர்களையும் மிரட்டி குழந்தை களுக்கு இழைக்கப்பட்ட மோசமான வன்முறையை மனிதாபிமானமற்ற முறையில் அணுகி, போக்சோ சட்ட வழிகாட்டுதல்களை முறையாக செயல்படுத்தாத காவல்துறையினர் மீதும் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ் நாடு மாநிலக்குழு சார்பில் கேட்டுக் கொள்கின்றோம். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.