districts

img

மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை

கிருஷ்ணகிரி, ஆக. 31- கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் தனியார் பள்ளியில் கடந்த 5 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை போலி என்சிசி முகாம் நடத்தி 13 மாணவிகளுக்கு நடந்த பாலியல் வன்கொடுமைகளுக்கு கண்ட னம் தெரிவித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் பர்கூர் பேருந்து நிலையம் முன்பு சனிக்கிழமை (ஆக.31) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தனியார் பள்ளி நிர்வாகத்தையே காப்பாற்றவும், குற்றங்களை மூடி மறைக்க முயற்சித்தவர்களையும், என்சிசி முகாம் குறித்து கண்டு கொள்ளாதிருந்த மாவட்ட கல்வி அதிகாரிகளையும் கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ராதா தலைமை தாங்கினார். தலைவர் சரஸ்வதி, துணைத் தலைவர் மல்லிகா முன்னிலை வகித்தனர். மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா கண்டன உரையாற்றினார். சிபிஎம் பர்கூர் வட்டச் செயலாளர் சீனி வாசன், மாதர் சங்க நிர்வாகிகள் கவிமணி தேவி, மகாலட்சுமி, கவிதா,சத்யா, ஷபானா, முபாரக், சாவித்திரி மாதேஸ்வரி, அபிராமி, பரிதா, வைதேகி உள்ளிட்டோர் பேசினர்.