districts

img

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துக புதுச்சேரியில் மாதர் சங்கம் பிரச்சாரம்

புதுச்சேரி, டிச.21- விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரி மாதர் சங்கம் சார்பில் புதுச்சேரியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. அத்தியாவசிய பண்டங்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். ரேஷன் கடைகள் மூலம் 14 அத்தியாவசிய பண்டங்களை குறைந்த விலையில் வழங்க வேண்டும். ரெஸ்ட்ரோ பார்களை மூட வேண்டும்.பெண்களுக்கான இலவச பேருந்து திட்டத்தை செயல்படுத்த வேண்டும். குடும்பத் தலைவிக்கான ரூ.1,000 ஆயிரம் வழங்கும் திட்டத்தை அனைத்து குடும்ப தலைவிக்கும் வழங்கும் வகை யில்  திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும். மகளிர் ஆணையத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை புதுச்சேரி அரசை வலியுறுத்தி பிரச்சாரம் நடைபெற்றது வேண்டும். புதுச்சேரி முத்தி யால்பேட்டை கடைவீதியில் நடைபெற்ற பிரச்சாரத்திற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில பொருளாளர் மாரிமுத்து தலைமை தாங்கினார். மாநில தலைவர் முனி யம்மா, செயலாளர் இள வரசி, துணைத் தலைவர் உமா சாந்தி,நகர கமிட்டி செய லாளர் ஜானகி, நிர்வாகிகள் லலிதா, ரஞ்சிதா, மாரி உள்ளிட்ட திரளான பெண்கள் இப்பிரச்சாரத்தில் பங்கேற்றனர். பாகூரில் துவங்கிய தெருமுனை பிரச்சாரம், மண்ணாடிபட்டு, வில்லிய னூர் கொம்யூன் பகுதிக ளில் நடைபெற்ற பின்னர், புதுச்  சேரி நகரப் பகுதிகளில் நடைபெற்றது. பிரச்சார த்தின் போது பெண்களிடம்  பெறும் கையெழுத்துக்கள் மாநில முதல்வரை சந்தித்து மாதர் சங்க தலைவர்கள் வழங்க உள்ளனர்.