சென்னை, மே 3 - மாநகராட்சியின் அலட்சியத்தால் இரண்டு உயிர்கள் பலியாகி உள்ளன. இது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகார் மனுக்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி ஆணையரிடம் மார்க் சிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. புளியந்தோப்பு சமுதாய நல மருத்துவமனையில் உரிய மருத்து வர்கள் இன்றி, முறையான சிகிச்சை அளிக்காததால் ஏப்.6 அன்று பிரசவத் திற்காக அனுமதிக்கப்பட்ட கே.பி.பார்க் குடியிருப்பை சேர்ந்த ம.கோட்டீஸ்வ ரன் மனைவி ஜனகவள்ளி (வயது 28) இறந்துள்ளார். இதுகுறித்து மாநக ராட்சி ஆணையரிடம் ஏப்.17ந் தேதி நேரடியாக மனு அளிக்கப்பட்டது. அப்போது, ஐஏஎஸ் அதிகாரி தலைமை யில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். 59வது வட்டம், பல்லவன் சாலை, இந்திரா நகர் பகுதியை சார்ந்த நடராஜன். இவரது மகன் கனகராஜ் (வயது 37) ஏப்.13 அன்று, சேப்பாக்கம் மசூதி தெருவில் மழைநீர் கால்வாய் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது தண்ணீர் தேங்கியிருந்த கால்வாயில் ஒரு மேன் ஹோல் வழியாக சுமார் மூன்று அடி உள்ளே சென்று மற்றொரு மேன் ஹோலில் பொருத்தப்பட்டிருந்த மரப்பலகைகளை மின்சார இணைப் புக் கொண்ட கட்டிங் மெஷின் மூலம் எடுக்க தொடங்கியிருக்கிறார். அச்சமயம், வலது கையில் பிடித்துக் கொண்டிருந்த கட்டிங் மெஷின் கனக ராஜின் இடது கையில் பட்டு பலத்த காயம் ஏற்பட்டும், மின்சாரம் பாய்ந்தும் உயிரிழந்ததாக தெரிய வரு கிறது. இது குறித்தும் ஆணையரிடம் ஏப்.17 அன்று நேரிடையாக புகார் செய்யப்பட்டது. அப்போது ஆணையர்,
“இதுகுறித்து எவ்விதமான தகவலும் அதிகாரிகள் தனக்கு தெரிவிக்க வில்லை” என்றார். இதனையடுத்து ஏப்.24 அன்று புகார் மனு ஆணையர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்டது. இந்த மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிய வில்லை. ஆகவே, இந்த இரண்டு மரணங்கள் குறித்து மாநகராட்சி தரப்பில் எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது? இத்தகைய உயிரிழப்புகள் எதன் காரணமாக ஏற்பட்டன? இதுபோன்று உயிரிழப்புகள் நடக்காமல் இருக்க எத்தகைய வழிமுறைகளை மாநக ராட்சி பின்பற்ற போகிறது? என்பது குறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். பட்டியலினத்தை சேர்ந்த ஜனக வள்ளி, கனகராஜ் ஆகியோரின் உயிரிழப்புகளுக்கு காரணமானவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளை உறுதியாக எடுத்து, உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி புதனன்று (மே 3) மாநகராட்சி ஆணை யர் ககன்தீப் சிங் பேடியை சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா மனு அளித்தார். இந்த மனுவை பெற்றுக் கொண்ட ஆணையர், இம்மனுக்கள் மீதான நடவடிக்கை குறித்து ஒரு வார காலத் தில் பதில் அளிப்பதாக தெரிவித்தார். இந்நிகழ்வின்போது, ஜனகவள்ளி யின் கணவர் ம.கோட்டீஸ்வரன், கனக ராஜியின் சகோதரர் ந.தனசேகரன், சிபிஎம் எழும்பூர் பகுதிக்குழு உறுப்பி னர் த.சித்தார்த்தன் ஆகியோர் இருந்தனர்.