மதுராந்தகம், நவ. 21- மதுராந்தகம் ஒன்றியம், வையாவூர் ஊராட்சிக்குட்பட்ட கொளப்பாக்கம் கிராமத்தில் வார்டு எண் 8,9 ஆகிய பகுதிகளில் கடந்த 7 மாதங்களாக 100 நாள் வேலை வழங்கப்படாததை கண்டித்து சிபிஎம் சார்பில் படாளம் வேடந்தாங்கல் சாலையில் மறியல் போராட்டம் புதனன்று (நவ.20) நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதனன்று கொளம்பாக்கத்தில் கட்சியின் மதுராந்தகம் வட்டச் செயலாளர் எஸ்.ராஜா தலைமை யில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற போது மதுராந்தகம் வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் படாளம் காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து உடனடியாக வேலை வழங்கப்படும் என வாக்குறுதி அளித்ததன் அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டத்தில் கட்சியின் மாவட்ட செய லாளர் பி.எஸ்.பாரதி அண்ணா, மாவட்ட குழு உறுப்பினர் பி.மாசிலாமணி, விதொச மாவட்ட பொருளாளர் வி.சசிகுமார்,தவிச மாவட்ட செயலாளர் கே.வாசுதேவன் மாதர் சங்கம் வட்ட செயலாளர் கே.வனிதா உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.