சிதம்பரம், செப். 30- சிதம்பரம் அருகே ஆலங்குளம் பகுதி யில் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக 67 குடும்பங்கள் வீடு கட்டி வாழ்ந்து வரு கிறார்கள். இந்த வீடுகள் ஆக்கிரமிப்பில் உள்ளது என தனிநபர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, உயர்நீதி மன்ற உத்தரவுகளை நிறைவேற்றுவதாக கூறிய வருவாய் துறையினர் காவல் துறை யின் துணையுடன் பொக்லைன் இயந்திரம் மூலம் வீடுகளை இடித்தனர்.இதை அறிந்த அந்த பகுதிக்கு வந்த சிபிஎம் நகரச் செயலாளர் ராஜா, தமிழக வாழ்வுரிமை கட்சியின் நகர செயலாளர் குமரன் தலைமையில் ஏராளமானோர் குவிந்தனர்.அப்போது, மாற்று இடம் வழங்கிய பிறகு வீடுகளை இடிக்க வேண்டும் என்றனர். இதை அதிகாரிகள் ஏற்க வில்லை. இதனால். இயந்திரத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அனை வரையும் காவல்துறையினர் கைது செய்தனர். வீடுகளை இழந்தவர்களுக்கு மாற்று இடம் வழங்கிய பிறகு தான் அனைத்து வீடுகளும் அகற்றப்படும் ஒரு மாதத்திற்கு முன்பு சிபிஎம் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தலைமையில் போராட்டம் நடத்தினர். அன்றைக்கு, அளித்த எழுத்து மூலம் அளித்த உறுதிமொழியை சிதம்பரம் சாராட்சியர் ராஷ்மி ராணி மற்றும் வருவாய் துறையினர் மீறிவிட்டனர்.