districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகத்தின் இளையமகன் திருமணம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம்-ஆசிரியை ஆ.செல்வகுமாரி ஆகியோரது இளையமகன் ச.உதயபாரதி -ரோஷ்னி ஆகியோரது திருமணம் வியாழனன்று (ஏப்.22) ஆவடியில் நடைபெற்றது. கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த திருமண விழாவில் மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன், மாநிலக்குழு உறுப்பினர் பி.டில்லிபாபு, சிபிஐ மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் வே.துரைமாணிக்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் வி.சுப்பிரமணியன், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க  மாநில பொதுச் செயலாளர் வி.அமிர்தலிங்கம், சிபிஎம் ஆவடி பகுதிச் செயலாளர்ஆர்.ராஜன், திருப்பத்தூர் நிலவங்கி தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் - டாக்டர் லீலா உள்ளிட்டோர் மணமக்களை வாழ்த்தி பேசினர்.

;