districts

img

மெரினா உணவுத் திருவிழா ரூ.1.50 கோடிக்கு உணவு விற்பனை

சென்னை, டிச.25- தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் சென்னை மெரினா வில் கடந்த 20-ந்தேதி மகளிர் சுய உதவிக்குழுவினரின் உணவுத் திருவிழா தொடங்கியது. இதில் தமிழ கத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் சிறப்பு வாய்ந்த பாரம்பரிய சைவ மற்றும் அசைவ உணவு வகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டது. மகளிர் சுய உதவிக்குழு வினர் தங்களின் கைப்பட சமைத்து வழங்கும் உணவு களே இங்கு விற்பனை செய்யப்பட்டது. உணவுத் திருவிழாவில் ராணிப்பேட்டை ஆற்காடு பிரியாணி, தருமபுரி ரவா கஜூர், சாமை வெண் பொங்கல், திணை இனிப்பு பொங்கல், கிருஷ்ணகிரி கம்பு பாயாசம், ஈரோடு அடை அவியல், சேலம் தட்டு வடை, கார பொரி, சிவகங்கை நெய் சாப்பாடு- சிக்கன் கிரேவி, வேலூர் ராகி புட்டு, ராகி கொழுக்கட்டை, திண்டுக்கல் மட்டன் பிரியாணி, பழம்புரி, கிழங்கு மீன் கறி உள்ளிட்ட உணவு வகைகளை பொதுமக்கள் விரும்பி வாங்கி சாப்பிட்ட னர். உணவு வழங்கும் அரங்கில் நீண்ட வரிசை யில் காத்திருந்து பணம் கொடுத்து தங்களுக்கு தேவையானவற்றை மக்கள் வாங்கி விரும்பி உண்டனர். இந்நிலையில் மெரினாவில் கடந்த 5 நாட்களாக நடந்த உணவுத் திருவிழாவில் 3.20 லட்சம் மக்கள் கலந்துகொண்டு, மகளிர் சுய உதவிக் குழு வினரின் ரூ.1.50 கோடி மதிப்பிலான தயாரிப்பு பொருட்கள் விற்ப னையானது. 45 அரங்கங்களில் 286 வகையான சைவ, அசைவ உணவுகள், ஆயத்த உணவுப் பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் ஆகியவை விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.