districts

img

அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் மினி மாரத்தான் ஓட்டம்

அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் சுற்றுச்சூழலை பாதுகாத்திட வலியுறுத்தியும், பொது போக்குவரத்தை பயன்படுத்த வலியுறுத்தியும் செங்கல்பட்டு தொழிற்பேட்டையிலிருந்து பழைய பேருந்து நிலையம் வரை ஞாயிறன்று (பிப்ரவரி 12 ) மினி மாரத்தான் ஓட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாராயணன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு  காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆ.பரத்,  சிஐடியு மாநில துணைப் பொதுச் செயலாளர் வி.குமார், நகர மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன், நகர காவல் ஆய்வாளர் வடிவேல் முருகன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ப.சு.பாரதி அண்ணா, சிஐடியு மாவட்டச் செயலாளர் க.பகத்சிங்தாஸ் போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் பொருளாளர் கமலக்கண்ணன் உள்ளிட்ட பலர் பரிசுகளை வழங்கினர்.