கடலூர்,ஜூன்.27-
தமிழகத்தில் போதை பழக்கத்தால் பல குடும்பங்கள் நடுத்தெருக்கு வந்துள்ளது என்று கடலூர் பொதுகூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வேதனை தெரிவித்துள்ளார்.
கள்ளச்சாராயத்தை எதிர்த்து போராடியதால் படுகொலை செய்யப்பட்ட குமார், ஆனந்தனின் 25 வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி கடலூர் புதுப்பாளையத்தில் திங்களன்று (ஜூன் 26) நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசியது வருமாறு:
தோழர்கள் குமார், ஆனந்தனின் நினைவுகள் இன்னும் இருநூறாண்டுகள் தொடரும், அன்று அவர்க ளுடன் போராட்ட களத்தில் நின்றவர்கள் இந்த நிகழ்ச்சியை முன்னெடுத்துள்ளனர். நம் மீது தாக்குதல் தொடுப்ப வர்கள், போராளிகளை அழித்துவிட்டால் அமைத்தும் அழிந்து விடும் என மனப்பால் குடிக்கின்றனர். எதிரிகள் எப்போது அடிக்கிறீர்களோ அப்போதெல்லாம் நாங்கள் வீறு கொண்டு எழுவோம். அழிக்க நினைத்தால் அவர்கள் அழியாத ஆயுளை கொண்டு தான் வாழ்வார்கள். மக்கள் உரிமைக்கு போராடு கிறவர்கள், காவல் நிலைய மனித உரிமைகளை எதிர்த்து தட்டி கேட்டு போராடு கிறவர்களை எப்படியாவது விழ்த்தி விட வேண்டும் என்று நினைக்கிறார்கள். அழிக்க நினைத்தவர்கள் தான் வரலாற்றில் அழிந்து போயிருக்கிறார்கள் தவிர நாம் அழிந்ததாக வரலாறு இல்லை. அப்படிப்பட்ட மகத்தான தியாகத்துக்கு சொந்தக்காரர்களாக இருக்கிறவர்கள்தான் குமார், ஆனந்தன் அன்று கொலையுண்டபோது அவர்களுடைய உடலில் வெட்டு காயங்கள் இல்லாத இடங்களே இல்லை என்கிற அளவிற்கு கொடூர மாக வெட்டினர்.
கள்ளச்சாராய வியா பாரத்திற்கு தடையாக இருக்கிறார்கள் என்ற காரணத்தினால் அழித்தார்கள். இப்போது கள்ளச்சாராயம் இல்லாத ஒரு பகுதியாக புதுப்பாளை யம் மாறி இருக்கிறது என்று சொன்னால் அதற்கு மார்க்சிஸ்டுகள் கொடுத்திருக்கிற விலை தான் குமார், ஆனந்தன் உயிர்கள். 25 ஆண்டுகளாக கள்ளச்சாராயத்தை, மது போதையை எதிர்த்து போராடி வருகின்றோம்.
வேலூரில் பள்ளி மாணவி சமீபத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்தார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான தந்தையிடம் அமைதியாக சொல்லிப் பார்த்தேன் குடிப்பதை நிறுத்தவில்லை. ஆதலால் தூக்கு மாட்டி உயிரை மாய்த்துக்கொள்கிறேன் இதற்குப் பிறகாவது குடிப்பழக்கத்தை நிறுத்துங்கள் என்று வாழ வேண்டிய பள்ளி மாணவி கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிர் துறந்தார். குடிப்பழக்கம் பல குடும்பங்களை நடுத் தெருவிற்கு கொண்டு வந்துள்ளது. குடிப்பழக்கத் தால் 25, 30 வயதிலேயே கண வனை இழந்து விதவையாக பெண்கள் கிராமங்களில் உள்ளனர். அந்த அளவிற்கு குடிப்பழக்கம் மோசமாகி உள்ளது.
வாலிபர் சங்கத்திற்கு பாராட்டு
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தமிழகத்தில் மகத்தான இயக்கத்தை தொடங்கியுள்ளது. போதைப் பழக்கத்தை தமிழ கத்தில் இருந்து ஒழிக்கின்ற இயக்கமாக ஒரு கோடி பேரிடம் கையெழுத்து வாங்குகின்ற இயக்கத்தினை தொடங்கி நடத்தி வருகின்றனர். அன்று கள்ளச் சாராயத்தை எதிர்த்து போராடியவர்கள் இன்று போதை பழக்கத்தை எதிர்த்து போராடுகிறார்கள். போராட்டம் தொடர்கிறது, போராட்டம் தீவிரமடைந்து தான் இருக்கிறது.
இவ்வாறு கே. பால கிருஷ்ணன் பேசினார்.