காஸாவில் அப்பாவி மக்களை கொன்று குவித்த இஸ்ரேலின் அட்டூழியத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மங்கலம் மாமண்டூர் - கீழ்கொடுங்காலூர் கூட்டு சாலையில் கிளைச் செயலாளர் இரா .சேட்டு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டார செயலாளர் அப்துல் காதர், மாவட்டக் குழு உறுப்பினர் முரளி, கரும்பு விவசாயிகள் சங்க மாநிலக் குழு உறுப்பினர் அரிதாசு, வாலிபர் சங்க நிர்வாகி சுகுமார் மற்றும் நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், ராமகிருஷ்ணன், பால்ராஜ் ஆகியோர் உரையாற்றினர்.