districts

img

மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது மகாலட்சுமி நகர் பிரதான சாலை

சென்னை, ஜூன் 27-

      எர்ணாவூர் மகாலட்சுமி நகர் பிரதான சாலையை திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.சங்கர் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஆர்.ஜெயராமன் திருவொற்றியூர் நகரமன்றத் தலைவராகவும், திமுகவைச் சேர்ந்த கே.பி.பி.சாமி அமைச்சராகவும் இருந்த போது, ஐடிசி நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியில் இருந்து 32 லட்ச ரூபாயும், மாவட்ட நிர்வாகத்  தரப்பில் 64 லட்ச ரூபாயும் பெறப்பட்டு,  இந்த சாலை கடந்த 15 ஆண்டுக ளுக்கு (2008ஆம் ஆண்டு) முன்பு போடப்பட்டது.

    திருவொற்றியூர் நகராட்சி 2011ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி யுடன் இணைக்கப்பட்டது. அதன்பிறகு  சாலையை முறையாக பராமரிக்காத தால் முற்றிலுமாக பழுதடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற சாலையாக மாறியது. மழைக்காலங் களில் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் சாலையில் நடந்து கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    இதனால் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் மிகவும் பாதிக்கப்பட்டனர். சாலையை சீரமைக்கக் கோரி பலமுறை அதிகாரிகளிடம் முறை யிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதையடுத்து அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் 2018ஆம் ஆண்டு நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மகாலட்சுமி நகர் பொதுநல சங்கம் சார்பிலும்  பலகட்ட போராட்டங்கள் நடை பெற்றன. ஆனாலும் சாலை சீரமைக்கப் படவில்லை.

    இந்நிலையில் கடந்த ஆண்டு 4ஆவது வார்டு மாமன்ற உறுப்பினராக  ஆர்.ஜெயராமன் தேர்வு செய்யப் பட்டார். அவர் சாலையை சீரமைக்கக் கோரி மாநகராட்சி கூட்டத்திலும், மன்றக் கூட்டத்திலும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இதையடுத்து ரூ52 லட்ச மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கப்பட்டது.

    இதையடுத்து 15ஆண்டுகளுக்கு பிறகு சாலை அமைத்துக் கொடுத்த மாநகராட்சி நிர்வாகத்திற்கும், சட்டமன்ற உறுப்பி னர், மண்டலக் குழு தலைவர் ஆகியோருக்கும் பாராட்டு விழா எர்ணாவூர் மகாலட்சுமி நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தின் சார்பில் செவ்வாயன்று (ஜூன் 27) நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் எஸ்.கதிர்வேல் தலைமை தாங்கினார். பொருளாளர் எஸ்.இ.குப்பன் வரவேற்றார்.

    கல்வெட்டையும், மேம்பாலம் செல்ல அமைக்கப்பட்ட பாதை யையும் மண்டலக் குழு தலைவர் தி.மு.தனியரசு திறந்து வைத்தார். நிறைவாக சங்கத்தின் செயலாளர் ஆர்.மணிகண்டன் நன்றி கூறினார்.

    இதில் திருவொற்றியூர் மண்டல செயற்பொறியாளர் தணிகைவேல், உதவி பொறியாளர் ஜெயக்குமார், 11ஆவது வட்ட உதவிப் பொறியா ளர் கோதண்டராமன், ஒப்பந்த தாரர்கள் லோகு, எஸ்.வெங்கடேசன்,  முன்னாள் நகரமன்ற உறுப்பினர் உஷா ஜெயச்சந்திரன், அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.பாக்கிய லட்சுமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கசியின் மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.செல்வகுமாரி, பகுதிக்குழு உறுப்பினர்கள் கே.,வெங்கடைய்யா, பி.அலமேலு, கே.கே.புஷ்பா, கன்னி யாலால் லேஅவுட் தலைவர் சி.சடகோபன், முல்லை நகர் தலைவர் சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.