districts

img

வேடந்தாங்கல் ஏரியை ஆழப்படுத்தவேண்டும் மதுராந்தகம் வட்ட மாநாடு கோரிக்கை

 மதுராந்தகம்,அக். 21- வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய ஏரியை தூர்வாரி அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என  மதுராந்தகம் வட்ட சிபிஎம் மாநாடு வலியுறுத்தி யுள்ளது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  மதுராந்தகம் வட்ட 13 வது மாநாடு மதுராந்தகத்தில் நடைபெற்றது. கட்சியின் கொடியை மாவட்ட குழு உறுப்பினர் பி.மாசிலாமணி ஏற்றி வைத்தார். வட்ட குழு உறுப்பி னர் டி.நடராஜ் அஞ்சலி தீர் மானத்தை வாசித்தார். வட்டக் குழு உறுப்பினர் கே.வனிதா வரவேற்றார். மாநாட்டை துவக்கி வைத்து மாநிலக் குழு உறுப்பினர் எம். ஆறுமுக நயினார் பேசினார். வட்டச் செயலாளர் எஸ்.ராஜா வேலை அறிக்கையும் வட்டக் குழு  உறுப்பினர் எம்.எஸ்.அர்ஜுன்  குமார் வரவுசெலவு அறிக்கையும் சமர்ப்பித்தனர். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.அரி கிருஷ்ணன் க.பகத்சிங் தாஸ்  ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாநாட்டை நிறைவு செய்து மாவட்ட செயலாளர் பி.எஸ்.பாரதி அண்ணா பேசினார்.  மதுராந்தகத்தில் அரசு கலைக்கல்லூரி, அரசு மேல்நிலைப்பள்ளி அமைத்திட வேண்டும், 30 ஆண்டு களுக்கு மேலாக அரசு புறம்போக்கு நிலத்தில் வசித்து வரும் மக்களுக்கு குடிமனை பட்டா வழங்க வேண்டும், வழங்கிய பட்டாவை அடங்களில் ஏற்றி கணினி பட்டா வழங்கிட வேண்டும், மதுராந்தகம் ஏரியை முறையாக தூர்வாரி ஏரிக்கரையை அகலப்படுத்தி சுற்றுலாத்தலமாக அமைக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஒன்றியக்குழுக்கள் தேர்வு இம்மாநாட்டில் மதுராந்தகம் வட்டத்தை மதுராந்தகம் ஒன்றியம், அச்சரப்பாக்கம் ஒன்றியம் என இரண்டாக பிரிக்கப் பட்டது. 13 பேர் கொண்ட மதுராந்தகம் ஒன்றிய குழுவிற்கு எஸ்.ராஜா செயலாளராகவும்.  8 பேர் கொண்ட அச்சரப்பாக்கம் ஒன்றிய குழுவிற்கு எம் எஸ் அர்ஜுன் குமார் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்ட னர்.