districts

img

மாதவரம் தணிகாசலம் நகர் கிழக்கு, மேற்கு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்!

சென்னை, அக். 9- மாதவரம் தொகுதி தணிகாசலம்  நகர் கிழக்கு மற்றும் மேற்கு  பகுதி களில் உள்ள 60க்கும் மேற்பட்ட நகர்பகுதிகள் மழைவெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளது. மாதவரம் தொகுதிக்குட்பட்ட தணிகாசலம் நகர் மேற்கு மற்றும் கிழக்கு பகுதி, பொன்னியம்மன் மேடு  பகுதிகளில் 60க்கும் மேற்பட்ட நகர்கள் உள்ளன. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். ஒவ்வொரு வருடமும் பருவமழை காலத்தில் இந்தப் பகுதிகள் கடும் பாதிப்புக்குள்ளாகின்றன. சென்ற வருடமும் இந்தப் பகுதிகள் மழை  வெள்ளத்தால் கடுமையான பாதிப்பை சந்தித்தன. மந்தமாக பணிகள் ரெட்டேரியின் உபரி நீர் தணிகா சலம் நகர் கால்வாயில் ஓடி, கேப்டன்  காட்டன் கால்வாயில் கலப்பதற்கு பதிலாக, தணிகாசலம் நகர் பகுதிக் குள் புகுந்து ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. உபரி நீரை உள்வாங்கி செல்லும் கொள்ளவை விட கூடு தலாக தணிகாசலம் நகர் கால்வாயில்  ரெட்டேரி உபரி நீர் புகுந்ததன் விளைவுதான் சென்ற வருடம் ஏற்பட்ட பாதிப்புக்கு காரணம். கடந்த கால மழை வெள்ள அனுப வங்களை கணக்கில் எடுத்துக் கொண்டதன் அடிப்படையில், தமிழ்நாடு அரசு தணிகாசலம் நகர்  கால்வாயின் உபரி நீரை வெளி யேற்றும் கால்வாயை அகலப்படுத்த  திட்டமிட்டது. நீர்வள ஆதாரத்துறை சார்பில் கட்டப்படும் 3,050 மீட்டர் நீளம் கொண்ட தணிகாசலம் நகர்  உபரி நீர் கால்வாய் அகலப்படுத் தும் பணி 91.36 கோடி ரூபாய் மதிப் பீட்டில்  தற்போது நடைபெற்று வரு கிறது. ஆனால் இந்தப் பணி மிகவும் மந்தமாக நடைபெற்று வருகிறது. மக்கள் கோபம் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், இந்த கால்வாய் பணியை முழுமையாக பூர்த்தி செய்வதற்கான முனைப்பும், முயற்சியும் நீர்வளத் துறையிடம் இல்லை. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் சூழலில், இவ்வளவு மெத்தனமாக நீர்வளத் துறை இருப்பது அப்பகுதி மக்க ளிடையே கடுமையான கோபத்தை உருவாக்கி உள்ளது. எனவே வழக்கமாக செய்யும் பணியாட்களை விட மூன்று மடங்கு கூடுதலாக ஆட்களை வைத்து  தணிகாசலம் நகர் கால்வாயை அகலப்படுத்தும் பணியை விரைந்து  முடிக்க நீர்வளத் துறைக்கு தமிழ் நாடு அரசு உத்தரவிட வேண்டும். தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சென்ற மாதம் இந்த  பகுதியை பார்வையிட்டு அக்.15க் குள் பணியை முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். ஆனால்  அந்த உத்தரவுக்கு பிறகும் நீர்வளத்துறையின் செயல்பாடு மந்தமாகவே உள்ளது. இந்நிலையில் வடசென்னை குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் டி.கே.சண்முகம், பொருளாளர் ஆர்.பொன்னுசாமி, துணைப் பொதுச் செயலாளர் கே.நம்மாழ்வார், துணைச் செயலாளர் தேவராஜ், டெய்சி மணியம்மை மற்றும் அந்த பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட குடியிருப்போர் நலச் சங்கங்களின் நிர்வாகிகளும், அந்த வட்டத்தின் மாமன்ற உறுப்பினர் கார்த்திக்கும் உண்மை நிலை அறிய கால்வாய் திட்ட பணியை புதனன்று (அக். 9)  பார்வையிட்டனர்.

கூட்டமைப்பு தலைவர் பேட்டி  

பின்னர் இதுகுறித்து கூட்ட மைப்பின் தலைவர் டி.கே.சண்மு கம் கூறுகையில், இந்தப் பகுதி மக்களை மழை வெள்ளத்திலிருந்து பாதுகாக்க அரசு விரைந்து செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்  கொண்டார். மேலும், உபரி நீரை உள்வாங்கும் சக்தி இல்லாத குறு கலான கால்வாயை அகலப்படுத் துவதே நீர்வளத் துறையின் நோக்கம்  என்றால், கால்வாயின் குறுக்கே நாகாத்தம்மன் கோயில் சுவரும், கூடாரமும் கட்டப்பட்டிருப்பதை அரசு எப்படி அனுமதிக்கிறது. இத னால் கால்வாய் அகலப்படுத்தும் பணிக்காக 40 அடி சாலை குறுக்கப் படுவது ஏன் என்று கேள்வி எழுப்பி னார். சமீபத்திய உச்சநீதிமன்ற தீர்ப்பை அரசு கணக்கில் கொண்டு ஆக்கிரமிப்பை அகற்றி, 40 அடி சாலையை குறுக்காமல், கால்வாய் அகலப்படுத்தும் பணியை விரைந்து  முடிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசையும், நீர்வளத் துறையையும் கூட்டமைப்பின் சார்பில் வலியுறுத்து வதாக தெரிவித்தார்.