districts

மாதவரம் மெட்ரோ ரயில் பணிமனை பணிகள் அடுத்த ஆண்டுக்குள் முடியும்

 சென்னை, மார்ச் 11- சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.63 ஆயிரத்து 246 கோடி  மதிப்பில் 118.9 கிலோ மீட்டர் தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. இதில், மாதவரம் சிறுசேரி வழித் தடத்தில் 19.1 கிலோ மீட்டர் தொலைவு உயர்நிலைப் பாதையாகவும், 26.7 கிலோ மீட்டர் தொலைவு சுரங்கப் பாதையாகவும் அமையவுள்ளது. மொத்தம் 49 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதில் மாதவரத்தில் 48.89 ஏக்கர் பரப்பள வில் ரூ.289 கோடியே 51 லட்சம் மதிப்பில்  மெட்ரோ ரயில் பணிமனை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிமனையில் 3 பெட்டிகள்  கொண்ட ஒரு  ரயில் என்ற அடிப்படையில் 110 மெட்ரோ ரயில்கள் நிறுத்தும் வகையில் பணிமனை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிமனையில் 24 ரயில் நிறுத்த  பாதைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இது தவிர 1.4 கிலோ மீட்டர் சோதனை  ஓட்டத்திற்கான இருப்பு பாதையும் அமைக் கப்பட உள்ளது. மெட்ரோ ரயில்களை பராமரிக்கவும், சுத்தம் செய்யவும், தொழில்நுட்பப் பணிகளை மேற்கொள் ளும் வகையில் இந்த பணிமனை வடிவமைக் கப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் வழித்தடம் 3 மற்றும் 5ல் இயக்கப்பட உள்ள  மெட்ரோ ரயில்களுக்கான பணிமனையாக மாதவரம் பணிமனை செயல்பட உள்ளது. இந்த பணிமனை அமைக்கும் பணிகளை 2024ம் ஆண்டு இறுதிக்குள் முடிக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.