ராணிப்பேட்டை, நவ. 24 – ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் வட்டம், மருதாலம் ஊராட்சி ஒன்றியம், மரு தாலம் கூட்ரோடு பகுதி சுற்றியுள்ள 15 ஊர் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியுள்ளது. அதன்படி வழித்தட எண் 777, 400, 160, 161 பேருந்துகள் மருதாலம் கூட்டு ரோட்டில் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்ல போக்குவரத்து கழகம் அனுமதி அளித்ததை தொடர்ந்து ஊராட்சி மன்றத் துணைத் தலை வர் கே. மலர் குமார் தலைமையில் ஞாயி றன்று (நவ. 24) நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. மருதாலம் கூட்ரோடு பகுதி சுற்றியுள்ள 15 ஊர் பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக் கைக்கு ஊராட்சி மன்றத் துணைத் தலை வர் கே. மலர் குமார், தமிழ்நாடு விவசாயி கள் சங்க சோளிங்கர் வட்டார செயலாளர் கே. ஜெய்சங்கர், மருதாலம் கட்சி கிளை சார்பில் தொடர்ந்து பல அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனுக்கள் அளித்தி ருந்த நிலையில் ஞாயிறன்று (நவ. 24) அனைத்து கட்சி சார்பில் நன்றி தெரி விக்கும் கூட்டம் நடைபெற்றது. உடன் மருதா லம் ஊராட்சி மன்ற தலைவர் எம். ராதா கிருஷ்ணன், சோளிங்கர் ஒன்றிய குழு உறுப்பினர் எம். சிதம்பரம், கட்சியின் தாலுகா செயலாளர் ஆர். மணிகண்டன், மாவட்ட குழு உறுப்பினர் ஹரி. கார்த்திக், பாமக ராணிப் பேட்டை கிழக்கு மாவட்ட தலைவர் எம். செல்வகுமார், அருளாசினி பேக்கரி உரிமை யாளர் எம். ஏழுமலை, எஸ். ராமதாஸ், டி. உமாபதி, இளவரசன், சூர்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு சால்வை அணிவித்து இனிப்புகளை வழங்கினர்.