திருவண்ணாமலை,பிப். 28- திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் பஞ்சமி நில மீட்புக்கு எதிராக செயல்படும் வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியருக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச் செயலாளர் கே. சாமு வேல்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த அருங்குணம் கிராமத்தில் பட்டியலில் மக்களுக்கு ஒப்படைப்பு செய்யப்பட்ட பஞ்சமி நிலத்தை வேறு சமூ கத்தைச் சேர்ந்த சிலர் ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்தனர். இதை யடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் நிலம் மீட்பு போராட்டம் நடத்தப்பட்டது. அரசு துறை அலுவலர்கள் போராட்ட களத்துக்கு வந்தனர். ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து பஞ்சமி நிலங்கள் மீட்கப்பட்டு மீண்டும் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்டது. அந்த நிலத்தில் பயிர் சாகுபடி வந்த செய்து வந்த பட்டிய லின மக்களின் விவசாய சாகுபடி பயிர்கள், ட்ரோன் இயந்திரம் மூலம், ஆக்கிர மிப்பாளர்கள் விஷம் தெளித்து அழித்தனர். அந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் பிப். 28 வெள்ளிக்கிழமை வந்த வாசி வட்டாட்சியர் அலுவ லகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஎம் வந்த வாசி வட்டாரச் செயலாளர் ஏ.அப்துல் காதர் தலைமை தாங்கினார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச் செயலாளர் கே. சாமு வேல்ராஜ், கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எம். சிவக்குமார், மாவட்டச் செயலாளர் ப. செல்வன், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் இரா. சரவணன், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் எம். வீரபத்திரன், எம். பிரகலதன், ந. சேகரன், ஏ.லட்சுமணன், எஸ். ராம தாஸ், மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள், தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள், வழக்கறிஞர் எஸ். அபி ராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய கே. சாமுவேல்ராஜ், அருங்குணம் கிராமத்தில் மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் பஞ்சமி நிலம் மீட்பு நேரடி போராட்டம் நடை பெற்றது. அந்த போராட்ட த்தில் 500க்கும் மேற்பட்ட களப்பணி யாளர்கள் கலந்து கொண்ட னர். 100 ஏக்கருக்கு மேல் பஞ்சமி நிலம் உள்ள அருங்குணம் கிராமத்தில், முதல் கட்டமாக செல்லன் என்பவருக்கு சொந்தமான நிலத்தை அவரின் வாரிசுகளுக்கு மீட்கும் போராட்டம் நடைபெற்றது. அரசு துறை அலுவலர்கள் அப்போது அந்த போராட்ட களத்துக்கு வந்தார். அவர்கள் முன்னிலையில் ஆக்கிரமிக்கப்பட்ட பஞ்சமி நிலம் மீட்டு பட்டிய லின மக்கள் இடம் ஒப்ப டைக்கப்பட்டது. தொடர்ந்து, வட்டாட்சியர் கோட்டாட்சியர் ஆகி யோரின் மறைமுக ஆதர வோடு ட்ரோன் மூலம் பச்சை பயிர்கள் மீது விஷம் தெளித்து அழிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து புகார் அளித்தும் காவல் துறையில் இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை. ஆனால் வட்டாட்சி யர் மற்றும் கோட்டாட்சியர் சார்பில் பஞ்சமி நிலத்தில் யாரும் பிரவேசிக்க கூடாது என்று அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். மீட்கப்பட்ட பஞ்சமி நிலத்தை மீண்டும் ஆக்கிர மிப்பாளர்களிடம் வழங்கு வதற்கு, வட்டாட்சியர், கோட்டாட்சியர் செயல்பட்டுள்ளனர் என்று கருத வேண்டியுள்ளது. அவர்கள் மீது, எஸ்சி.எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். மேலும் எதிர்காலத்தில் நமது போராட்டம், வட்டாட்சியர், கோட்டாட்சியருக்கு எதி ரான போராட்டமாக மாறும் என்றார்.