திருப்பத்தூர் அடுத்த தோரணம்பதி கிராமத்தில் உள்ள பேராம்பட்டு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைபெற்ற மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் கு.நல்லதம்பி கலந்து கொண்டு கடன் உதவி வழங்கினார். கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் குலோத்துங்கன், துணைத்தலைவர் திருநாவுக்கரசு, கந்திலி ஒன்றியக் குழு தலைவர் திருமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.