districts

img

சுமைப்பணி தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட்டம்

மதுராந்தகம், மே 25 - நீதிமன்ற உத்தரவை காட்டி பணி வழங்க மறுக் கும் மதுராந்தகம் நகர  வியாபாரிகளை கண்டித்தும்,  உடனடியாக அரசு தலையிட வலியுறுத்தியும் சுமைப்பணி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கோட்டாட்சியர் அலு வலகத்தில்  குடும்பத்துடன் கஞ்சி காய்ச்சும் போராடிய தால் கைது செய்யப்பட்டனர். சங்கத்தின் மாவட்ட செயலாளர் பி.மாசிலாமணி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் கோரிக்கை களை விளக்கி சுமைப்பணி சம்மேளன மாநில பொருளா ளர் அருள்குமார், சிஐடியு மாவட்ட செயலாளர் க.பகத் சிங் தாஸ், மாவட்ட துணைத் தலைவர் இ.ராமமூர்த்தி, சுமைப்பணி சங்க கவுரவத் தலைவர் டி.கிருஷ்ணராஜ், மாவட்ட தலைவர் ஆர்.நடராஜ், மார்க்சிஸ்ட் கட்சி யின் மதுராந்தகம் வட்ட செயலாளர் எஸ்.ராஜா, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மதுரை மாவட்ட செயலாளர் எம்.எஸ்.அர்ஜூன் குமார், ஆட்டோ சங்க மாவட்ட பொருளாளர் எம்.ரமேஷ்உள்ளிட்ட பல கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். இதனைத் தொடர்ந்து கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டத்தில் ஈடுபட்ட சுமைப்பணி சங்க நிர்வாகி கள் மற்றும் அவர்கள் குடும்ப த்தினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

;